கல்லாக மாறும் குழந்தை.. அரிதான நோயால் பாதிப்பு!

Date:

இங்கிலாந்தை சேர்ந்த குழந்தைக்கு மிக மிக அரிய மரபணு நோய் பாதிப்பு உள்ளதால் அக்குழந்தை கல்லாக மாறி வருகிறது. இந்த மரபணு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் சதையும் எலும்பாக மாறும் என கூறப்படுகிறது.

இங்கிலாந்தைச் சேர்ந்த லெக்சி ராபின்ஸ் என்ற குழந்தை கடந்த ஜனவரி 31ஆம் தேதி பிறந்தது. இயல்பாக பிறந்த குழந்தையாக இருந்தாலும், கட்டை விரல் மற்றும் கால் விரல்களை அசைக்க முடியவில்லை. இதையடுத்து, குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

குழந்தைக்கு என்ன பிரச்சினை மருத்துவர்கள் பரிசோதித்தபோது, Fibrodysplasia Ossificans Progressiva என்ற அரிதினும் அரிதான நோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இருபது லட்சத்தில் ஒருவருக்கு மட்டுமே இந்த நோய் பாதிக்கப்படுவதாக கூறுகின்றனர்.

இந்த நோய் பாதிப்பால் எலும்புகளுக்கு வெளியிலும் புதுப்புது எலும்புகள் உருவாகும். இதனால் உடல் நகர்வும், அசைவும் கடுமையாக பாதிக்கப்படும். தசைப் பகுதிகளே எலும்பாக மாறும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். எனவே, பாதிக்கப்பட்டவரின் உடல் மெல்ல மெல்ல கல் போல மாறுவதாக கருதப்படுகிறது.

இந்த நோயை குணப்படுத்த எந்தவொரு சிகிச்சையும் கண்டுபிடிக்கப்படவில்லை. பாதிக்கப்பட்ட நபர் 20 வயதில் படுத்த படுக்கையாகிவிடுவார்கள் எனவும், அதிகபட்சம் சுமார் 40 வயது வரையில் உயிருடன் இருப்பார்கள் எனவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

மேலும், நோயாளிக்கு ஊசி போடவோ, பல் சிகிச்சை மேற்கொள்ளவோ, குழந்தை பெற்றுக்கொள்ளவோ முடியாது.

spot_imgspot_img

More like this
Related

யாழில். இரண்டு கடலமைகளுடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணம் , சேந்தான்குளம் பகுதியில் இன்றைய தினம் சனிக்கிழமை இரண்டு கடலமைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் சேத்தான்குளம் பகுதியில்...

நாவிதன்வெளியில் வர்த்தகர்களுக்கான விசேட நுகர்வோர் விழிப்புணர்வு கருத்தரங்கு

நாவிதன்வெளி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் ஏற்பாட்டில், பிரதேசத்திலுள்ள வர்த்தகர்களுக்கான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்