மக்கள் அலட்சியமாக செயல்பட வேண்டாம் – மு.க.ஸ்டாலின்

Date:

கொரோனா தொற்று குறைந்துவிட்டது என மக்கள் அலட்சியமாக செயல்பட வேண்டாம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறத்தியுள்ளார்.

கொரோனா தொற்று குறித்த விழிப்புணர்வு காணொலியொன்றை வெளியிட்ட அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், ‘கொரோனா என்ற பெரும் தொற்றில் இருந்து மீண்டு வருகிறோம். நோய் பரவலை கட்டுப்படுத்துவற்காக அரசால் அறிவிக்கப்பட்ட பொது முடக்க விதிகளை முழுமையாக கடைப்பிடித்த மக்கள் அனைவருக்கும் நன்றி.

நாளொன்றுக்கு 36 ஆயிரத்தை எட்டிய தொற்று பாதிப்பானது இப்போது 4 ஆயிரத்திற்கும் கீழே குறைந்து வருகிறது. பொதுமுடக்கம், மருத்துவர்களின் அர்ப்பணிப்பு, மாநிலத்தின் மருத்துவக் கட்டமைப்பு, துடிப்பான நிர்வாகம் ஆகியவை மூலம்தான் இந்த வெற்றியை பெற முடிந்தது.

தற்போது கொரோனாவை கட்டுப்படுத்திவிட்டோம் என்று சொல்லலாமே தவிர, முழுமையாக ஒழித்துவிட்டோம் என்று சொல்ல முடியாது. எனவே மக்கள் யாரும் அலட்சியமாக இருந்து விடக்கூடாது’ எனத் தெரிவித்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

செயற்கை நுண்ணறிவு உதவியுடன் புதிய தடுப்பூசி கண்டுபிடிப்பு – பெருந்தொற்றுகளைத் தடுப்பதில் முக்கிய முன்னேற்றம்

எதிர்காலத்தில் உலகை அச்சுறுத்தக்கூடிய புதிய வைரஸ்கள் மற்றும் பெருந்தொற்றுகளில் இருந்து மனிதகுலத்தைப்...

குரு-சந்திர சேர்க்கையால் உருவான சமசப்தக் யோகம்: இந்த 4 ராசிக்காரர்களுக்கு வெற்றியும் செல்வமும் குவியுமா?

ஜூன் மாதத்தின் தொடக்கத்தில் ஜோதிட ரீதியாக பல சுப யோகங்கள் உருவாகி...

முச்சக்கர வண்டியின் மீது மரம் விழுந்து 3 பேர் பலி

நாவலப்பிட்டியிலிருந்து மப்பகந்த பகுதிக்குச் சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டி மீது யூக்கலிப்டஸ்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்