கண்டி மாவட்டத்தின் கட்டுகஸ்தோட்ட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட யட்டிவாவல கிராம சேவகர் பிரிவில் சாகராதெனிய தோட்டம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
இன்று காலை 6 மணி முதல் இந்த பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தின் பெரிய கல்லாறு 3 மற்றும் பெரிய கல்லாறு 3 தெற்கு கிராம சேவகர் பிரிவுகளும், நுவரெலியா மாவட்டத்தின் பெரமன தெற்கு கிராம சேவகர் பிரிவும், களுத்துறை மாவட்டத்தின் மஹா வஸ்கடுவ தெற்கு கிராம சேவகர் பிரிவும் இன்று காலை முதல் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டன.




