வான்பயிற்சிக்கு இலங்கை வான் பரப்பை கோரவில்லை!

Date:

மூன்றாவது நாடொன்றுடன் இணைந்து கூட்டுப்பயிற்சியில் ஈடுபடுவதற்காக இலங்கை வான்பரப்பை பயன்படுத்துவதற்கான எந்தவொரு கோரிக்கைகளும் அண்மைய காலங்களில் முன்வைக்கப்படவில்லை என்று இந்தியா தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் இந்திய உயர் ஸ்தானிகராலய பேச்சாளரினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மூன்றாம் நாடொன்றுடன் இணைந்து கூட்டு இராணுவப்பயிற்சியில் ஈடுபடுவதற்காக இலங்கையின் வான்பரப்பை பயன்படுத்த இந்தியா விடுத்த கோரிக்கையை இலங்கை அதிகாரிகள் நிராகரித்திருப்பதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

இவை முற்றிலும் உண்மைக்கு புறம்பான செய்திகளென இந்திய உயர் ஸ்தானிகராலயம் மறுப்புத் தெரிவிக்கின்றது.

மூன்றாவது நாடொன்றுடன் இணைந்து கூட்டுப்பயிற்சியில் ஈடுபடுவதற்காக இலங்கை வான்பரப்பை பயன்படுத்துவதற்கான எந்தவொரு கோரிக்கைகளும் அண்மைய காலங்களில் இந்தியாவால் விடுக்கப்பட்டிருக்கவில்லை என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

இஸ்ரேலுடன் உறவை இயல்பாக்குமாறு முஸ்லிம் நாடுகளை வலியுறுத்தும் ட்ரம்ப்

உருவாகி வரும் ஈரான் அமைதி ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, மத்திய கிழக்கு...

காயங்களுடன் முதியவரின் சடலம்

வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள பாவக்கொடிச்சேனை சிவன்கோவில் பாறையில் காயங்களுடன் முதியவர் ஒருவர்...

களுவாஞ்சிக்குடியில் மீன்பிடிக்க சென்ற இளைஞனின் சடலம் மீட்பு

களுவாஞ்சிகுடி கடலில் சிறிய படகில் மீன் பிடிக்க சென்ற 19 வயது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்