மழையே பெய்யாத பகுதி பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? நீங்கள் நினைப்பது போல் பாலைவனம் இல்லை இது ஒரு கிராமம் இங்கு இதுவரை மழையே பெய்தது இல்லை.
இந்த இடம் ஏமன் நாட்டின் தலைநகரான சானா பகுதியிலிருந்து மேற்கு பகுதியில் உள்ள மகாகா என்ற பகுதிக்குட்பட்ட ஹராஜ் என்ற பகுதியில் இருக்கும் அல்-ஹூதாகிப் என்ற கிராமம் தான் மழையே பெய்யாத கிராமம். இந்த கிராமம் ஒரு மலைப்பகுதியில் இருக்கிறது. அங்கு மலை மீது தான் கட்டிடங்கள் கட்டப்பட்டிருக்கும். மிக அழகாக தோற்றமளிக்கும் இந்த கிராமத்தை காண இங்கு ஆண்டுதோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
இந்த கிராமம் கடல் மட்டத்திலிருந்து சுமார் 3200 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. அவ்வளவு உயரமாக இருந்தாலும் இந்த இடம் பெரும்பாலும் சூடான பகுதியாகவே இருக்கிறது. குளிர் காலத்தில் அதிகாலையில் பயங்கர குளிர் இருந்தாலும் சூரிய உதயத்திற்கு பின்னர் இங்கு கோடை காலம் தான். அந்த அளவிற்கு இந்த பகுதி வெப்பமான பகுதியாக காணப்படுகிறது

இந்த பகுதியில் மிகவும் பழங்கால கட்டிடங்களையும் அதே நேரத்தில் மார்டன் கட்டிடங்களையும் கொண்ட பகுதியாக இருக்கிறது. இங்கு அல்போரா என்ற இன மக்கள் வசித்து வருகின்னறனர். ஏமன் இனக்குழுக்களில் இவர்களும் ஒரு இனக்குழுவாக இருக்கின்றனர். இவர்கள் பெரும்பாலும் இஸ்லாமியத்தை தழுவியர்களாக இருக்கிறார்கள்.
இந்த கிராமத்திற்கும் இந்தியாவிற்கும் மிகப்பெரிய தொடர்பு ஒன்று இருக்கிறது. இந்த கிராமத்திற்கு தலைவராக இருந்தவர் முகம்மது புர்காவூதீன், இவர் மும்பையில் தான் வாழ்ந்து வந்தார். இவர் கடந்த 2014ம் ஆண்டு மறைந்துவிட்டார். அதுவரை ஒவ்வொரு மூன்று ஆண்டிற்கு ஒரு முறை தன் கிராமத்திற்கு சென்று மக்களை சந்திப்பார்.
இந்த கிராமம் மிக உயரமான இடத்தில் இருப்பதாலேயே இந்த கிராமத்தில் மழையே பொழிவதில்லை. இந்த கிராமத்திற்கு கீழே தான் மேகங்கள் சூழ்ந்து நிற்கிறது. அதற்கு கீழே தான் மலைபொழிவு இருக்கும் என்பதால் இந்த கிராமத்திற்கு நேரடியாக மலை பொழிவு இருந்ததே கிடையாது. மேகத்தை காட்டியும் உயரமான இடத்தில் இருப்பதால் இந்த இடம் வெப்பம் மிகுந்த இடமாகவும் காணப்படுகிறது. உலகில் மழைப்பொழிவே இல்லாத பகுதி என்றால் அது இந்த அல்-ஹூதாகிப் கிராமம் தான்.




