இனி சீனா இராணுவ சீருடை அணியக்கூடாது!

Date:

திஸ்ஸமஹாராம, ‘திஸ்ஸ வாவியை தூர் வாரும் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் சீனாவின் இராணுவத்தினர் அல்ல, என்பதை சீன தூதரகம் உறுதி செய்துள்ளது.

பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு), கொழும்பிலுள்ள சீனா தூதரகத்திற்கு அனுப்பிய கடிதத்திற்கு பதிலளிக்கையிலேயே, இதனை தூதரகம்  உறுதிப்படுத்தியுள்ளது.

எதிர்காலத்தில் சர்ச்சைக்குரிய இராணுவ பாணி சீருடைகளை அணிவதைத் தவிர்ப்பதற்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்களிற்கு அறிவுறுத்த பாதுகாப்பு செயலாளர் தூதரகத்திற்கு தகவல் அளித்துள்ளார், மேலும் இனிமேல் இதுபோன்ற நடவடிக்கை மீண்டும் நிகழாமல் இருக்க உள்ளூர் தனியார் நிறுவனத்திற்கும் தகவல் அளித்துள்ளார்.

இதுபோன்ற எந்தவொரு முயற்சியையும் தடுத்து நிறுத்த தெற்கு மாகாண பொறுப்பான பொலிஸ் அதிகாரிக்கும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

திஸ்ஸமஹாராம, ‘திஸ்ஸ வாவியை தூர் வாரும் பணியில், சர்ச்சைக்குரிய இராணுவ பாணி சீருடைகளை அணிந்த சீன ஊழியர்களை கொண்ட ஒரு தனியார் நிறுவனம் ஈடுபட்டு வருவது ஊடக தகவல்களால் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

ஏப்ரல் 2026 வறுமைக் கோடு: ஒரு நபரின் அடிப்படைத் தேவைகளுக்கு ரூ.17,117 அவசியம்

தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் (Department of Census and Statistics)...

மட்டக்களப்பு: 24 வயது மகளிடம் ஆபாசமாக பேசிய குற்றச்சாட்டில் 60 வயது தந்தை கைது

மட்டக்களப்பு மாவட்டத்தில் தனது 24 வயது மகளிடம் ஆபாச வார்த்தைகளால் பேசி...

இரு குழந்தைகள் பலியான மட்டு விடுதி தீ: சந்தேகநபருக்கு ஜூன் 12 வரை விளக்கமறியல்

பிள்ளைகளுக்கு பிறப்பு பதிவு இல்லை – வெளிவரும் திடுக்கிடும் தகவல்கள்-- மட்டக்களப்பில் விடுதியில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்