இணைய வழி கற்கைக்காக தொலைபேசி வாங்குவதற்காக சிறுமியொருவர் மணல் சுரங்க பணியில் ஈடுபடும் புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொலன்னறுவை, குரக்தமன பகுதியில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
அம்முறை புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றவுள்ளார். எப்படியாவது புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைய வேண்டுமென்ற கனவுடன் இருந்த சிறுமியொருவர், இணைய வழி கற்கையில் கலந்து கொள்ள முடியாமல் இருந்துள்ளார்.
அவரது வீட்டில் ஸ்மார்ட் தொலைபேசியொன்று இருந்திருக்கவில்லை.
தொலைபேசி வாங்க அவர் பணம் திரட்டியதில் 1,500 ரூபாவே கிடைத்தது. இதையடுத்து, அந்த பகுதியிலுள்ள மணல் அள்ளும் இடத்தில் வேலைக்கு சென்று வருகிறார்.
இந்த வேலையின் மூலம் விரைவில் ஸ்மார்ட் தொலைபேசியொன்று வாங்கி, இணையவழி கல்வியில் கலந்து கொள்வேன் என தெரிவித்துள்ளார்.




