முல்லைத்தீவில் இன்று மாலை இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று மாலை 3 மணியளவில் முல்லைதீவு சிலாவத்தை யில் உள்ள யாழ் ஆயர் இல்ல காணியில் குப்பை எரித்த போது வெடிப்பு இடம்பெற்றது.
இதில் முகத்தில் காயமடைந்து அந்த பகுதியை சேர்ந்த 45 வயதுடைய நபர் ஒருவர் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.




