மட்டக்களப்பு, செங்கலடி கருத்தப்பாலத்தில் இராணுவ வாகனம் தடம்புரண்டு விழுந்ததில் இரண்டு இராணுவத்தினர் உயிரிழந்தனர். 4 பேர் காயமடைந்தனர்.
வாகரை இராணுவ முகாமிலிருந்து 6 பேருடன் சென்ற இராணுவ வாகனம், செங்கலடி கருத்தப்பாலத்தில் விபத்திற்குள்ளானது.
இதில் சம்பவ இடத்திலேயே 2 இராணுவத்தினர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 4 பேர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.




