சிஐடியின் முன்னாள் பணிப்பாளர் ஷானிக்கு பிணை!

Date:

குற்றவியல் புலனாய்வுத் துறையின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர மற்றும் சப் இன்ஸ்பெக்டர் சுகத் மெண்டிஸ் ஆகியோரை பிணையில் விடுவிக்குமாறு கம்பஹா உயர் நீதிமன்றத்திற்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இன்று காலை பிணை விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும்போது நீதிபதிகள் நிசங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஆர் குருசிங்க ஆகியோர் அடங்கிய குழாம் இந்த உத்தரவை பிறப்பித்தது.

இருவரும் தலா ரூ .25,000 பிணை, தலா ரூ .1 மில்லியன் பெறுமதியான இரண்டு தனிப்பட்ட பிணையில் விடுவிக்க உத்தரவிடப்பட்டனர்.

எஸ்.எஸ்.பி ஷானி அபேசேகர மற்றும் எஸ்.ஐ. மெண்டிஸ் ஆகியோர் கொழும்பு குற்றப்பிரிவால் கைது செய்யப்பட்டு கம்பஹா நீதிவான் நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்தப்பட்டனர்.

அவர்களின் பிரைண விண்ணப்பங்களை கம்பஹா நீதிவான் நீதிமன்றம் மற்றும் கம்பஹா உயர் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இருவரும், திருத்தம் செய்யப்பட்ட பிணை மனுவை மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்ததன் அடிப்படையில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

அனுபவமற்ற ஆட்சியால் நாடு சீரழிந்தது; நாட்டை மீட்க SJB மட்டுமே முடியும் – ஹலீம்

அனுபவமற்ற ஒரு குழுவினரின் கைகளில் ஆட்சி அதிகாரம் சென்றதன் விளைவாக நாடு...

ஏப்ரல் 2026 வறுமைக் கோடு: ஒரு நபரின் அடிப்படைத் தேவைகளுக்கு ரூ.17,117 அவசியம்

தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் (Department of Census and Statistics)...

மட்டக்களப்பு: 24 வயது மகளிடம் ஆபாசமாக பேசிய குற்றச்சாட்டில் 60 வயது தந்தை கைது

மட்டக்களப்பு மாவட்டத்தில் தனது 24 வயது மகளிடம் ஆபாச வார்த்தைகளால் பேசி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்