ஜூம் தொழில்நுட்பத்தின் மூலம் கைதிகள் தங்கள் உறவினர்களுடன் பேசுவதற்கு, சிறைச்சாலைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் சூழ்நிலை காரணமாக, சிறைகளில் பார்வையாளர்கள் தடை செய்யப்பட்டுள்ளனர். எனவே கைதிகளிற்கும், உறவினர்களிற்குமிடையில் சூம் வழியாக தொடர்பை ஏற்படுத்த புதிய முயற்சி தொடங்கப்பட்டது என்றார்.
வெலிக்கடைமற்றும் அங்குனுகொலப்பெலெச சிறைச்சாலைகள் உட்பட ஆறு சிறைகளில் புதிய முயற்சி தொடங்கப்பட்டுள்ளது என்றார்.
இந்த திட்டத்திற்கு தேவையான வசதிகளை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தால் வழங்கப்பட்டுள்ளது.




