பாலனின் மகள் கைது!

Date:

கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் பிரிவுன் உறுப்பினரான தெல் பாலா என்று அழைக்கப்படும் கருப்பையா பாலன் என்பவரின் மகள் பொலிஸ் விசேட அதிரடைப் படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அவரிடமிருந்து 50 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கருப்பையா நிர்மலா (41) என்பவரே கைதாகினார்.

சந்தேக நபரின் தந்தையான தெல் பாலா என அழைக்கப்படுபவர் இலங்கையில் பல குற்றங்களைச் செய்ததுடன், 15 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவுக்கு தப்பிச் சென்றிருந்தார். அவர் சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் இறந்துவிட்டார் என்று பொலிஸார் கூறினர்.

இந் நிலையில் தற்சமயம் கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அமைதியின்மை: பெண் கைதிகள் அனைவரும் இடமாற்றம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக சிறைச்சாலை கட்டடங்களுக்கு பாரிய...

அரை நிர்வாணமாக மீட்கப்பட்ட இளம்பெண்ணின் சடலம்

சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் ஒரு வீட்டில் பெண் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டதாக இரத்தினபுரி...

கரூர் நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு வழங்கப்படுவது தற்காலிக அரசு பணியாக இருக்க உயர்நீதிமன்றம் நிபந்தனை

கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயி​ரிழந்​தோரின் குடும்​பத்​தினருக்கு வழங்​கப்​படும் அரசுப் பணி,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்