யாழில் வாசனை சாவற்காரத்தில் போதைப்பொருள் கடத்தல்

Date:

வாசனை சவற்காரத்திற்குள் நூதனமான முறையில் போதைப் பொருளை கடத்தி யாழ்ப்பாணத்தின் நகர்புறப் பகுதியில் விற்பனைக்காக கொண்டு சென்ற ஒருவர் யாழ்ப்பாணம் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று (9) இடம்பெற்றது.

இது தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பாலித செனவிரத்ன கூறுகையில் –

யாழ் மாவட்டத்தின் பல பகுதிகளில் போதைப்பொருள் வியாபாரம் இரகசியமான முறையில் இடம்பெற்று வருவதாக யாழ் பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரும் பொலிஸ் புலனாய்வு பிரிவினரும் இணைந்து முன்னெடுத்த நடவடிக்கையின் போதே குறித்த நபர் கைதுசெய்யப்பட்டார்.

யாழ்ப்பாணம் உடுவில் பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதுடைத ஒருவரே இவ்வாறு வாசனை சவற்காரங்களுடன் கைதுசெய்யப்பட்டார்.

பொலிசாரின் சோதனையின் பொது வெளியிடமொன்றிலிருந்து பாசல் சேவிஸ் மூலம் வரவழைக்கப்பட்ட வாசனை சவற்காரத்தில் மாறைத்து வைக்கப்பட்டிருந்த 7 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டது.

கைதுசெய்தப்பட்ட நபர் ஏற்கனவே 2023 இல் ஒரு தடவையும் அதன் பின்னர் கடந்த மதமும் சிறியளவிலான இதே குற்றங்களுக்காக கைதாகி பிணையில் விடுவிக்கப்பட்ட ஒருவராவார்.

கைதான நபரிடம் மேலதிக விசாரணையின் பின் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே யாழ் பொலிஸ் பிரிவில் இவ்வாரம் 23 பேர் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளனர் – என்றும் தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

நீர்கொழும்பு சிறைக்கலவரத்தை தூண்டிய சுரேஷூக்கு ‘விருந்து’ வைத்த சக கைதிகள்!

சமீபத்தில் நீர்கொழும்பு சிறையில் நடந்த மோதலின் போது, ​​கைதிகள் வெளியே வருவதைத்...

துமிந்த திசாநாயக்க மீண்டும் சந்தேகநபராக பெயரிடப்பட்டார்

வெள்ளவத்தையில் உள்ள ஹவ்லொக் வீட்டுவசதி வளாகத்தில் காவல்துறையினரால் ரி-56 ரக துப்பாக்கி...

யாழ் நகரில் யாசகர்கள் அகற்றப்பட்டனர்

யாழ் நகர்ப் பகுதியில் சுற்றுச்சூழலுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தும் விதமாகவும் சுற்றுலாவிகளுக்கு இடையூறுகளை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்