தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர், விநியோகஸ்தராக இருப்பவர் ஆர்.பி.செளத்ரி. இவர் பல படங்களுக்கு பைனான்ஸ் செய்தும் வருகிறார்.புரியாத புதிர், சேரன் பாண்டியன், நாட்டாமை, பூவே உனக்காக, சூரியவம்சம், சொல்லாமலே, புன்னகை தேசம், திருப்பாச்சி, ஜிலால், களத்தில் சந்திப்போம் உள்ளிட்ட பல படங்களைத் தனது சூப்பர் குட் பிலிம்ஸ் மூலமாக ஆர்பி சௌத்ரி தயாரித்துள்ளார். மேலும் அவர் நடிகர்கள் ஜீவா மற்றும் ஜித்தன் ரமேஷின் தந்தையுமாவார்.
இவரிடம் நடிகர் விஷால் கடன் பெற்று அக்கடனை கடந்த பிப்ரவரி மாதமே முறைப்படி அளித்துவிட்டார். கடனுக்காக விஷால் தரப்பில் கையொப்பமிட்டு அளிக்கப்பட்ட செக் போன்ற பேப்பர்கள் இதுவரை ஆர்.பி.செளத்ரி தரப்பு திருப்பி அளிக்கவில்லை. அதனை பற்றி விஷால் தரப்பில் கேட்டதற்கு, செக் மற்றும் அனைத்து பேப்பர்களும் தொலைந்து விட்டதாக கூறி இருக்கிறார்கள்.
இதனால் விஷால் சார்பில் காவல் துறையிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.