தனக்கு சளிக்கான அறிகுறிகள் இருந்ததால் கொரோனா பரிசோதனை எடுக்கச் சொன்ன 3 வயது சிறுமி!

Date:

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான நாகாலாந்தின் ஸன்ஹிபோடோ மாவட்டத்தில் உள்ள காதாஷி என்ற பகுதியை சேர்ந்த மூன்று வயது சிறுமி லிபவி. இவரது பெற்றோர் கூலித் தொழிலாளர்களாக இருக்கின்றனர். இந்நிலையில் தாய், தந்தை இருவரும் வேலைக்கு சென்றுள்ளனர். அப்போது சிறுமி லிபவிக்கு லேசான சளி பாதிப்பு இருந்துள்ளது. இவ்வாறு சளி, காய்ச்சல் பாதிப்புகள் இருந்தால் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் தொடர்ச்சியாக விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்து வருகின்றன.

இந்த விஷயம் லிபவிக்கு நியாபகம் வந்துள்ளது. உடனே அருகிலுள்ள சுகாதார மையத்திற்கு தனியாக புறப்பட்டுச் சென்றுள்ளார். அதுவும் முகக்கவசம் அணிந்து சென்றிருக்கிறார். இவர் தனியாக வந்ததைக் கண்டு ஆச்சரியமடைந்த மருத்துவர் விசாரித்துள்ளார். அதற்கு, தனக்கு கொரோனா பாதிப்பு இருக்கிறதா எனப் பரிசோதித்து பாருங்கள் என்று கூறியுள்ளார். இதனால் மருத்துவர் மேலும் ஆச்சரியமடைந்து சிறுமியை பரிசோதனை செய்திருக்கிறார்.

வளர்ந்த இளைஞர்களும், படித்தவர்களும் கூட கொரோனா பரிசோதனை செய்து கொள்ளவும், தடுப்பூசி போட்டுக் கொள்ளவும் தயக்கம் காட்டி வருகின்றனர். அப்படியிருக்கையில் சிறுமியின் செயல் அனைவருக்கும் ஒரு பாடமாக அமைந்துள்ளது. உடனே சிறுமியை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளனர்.

Image

அதில், நாகாலாந்து மாநில பாஜக தலைவர் பெஞ்சமின் யெப்தோமி தனது ட்விட்டரில் லிபவி பற்றி பதிவிட்டது பெரும் வைரலானது. கொரோனா நெருக்கடி நிறைந்த சூழலில் பொறுப்புணர்வு உடன் செயல்பட வேண்டியது அவசியமாகிறது. இதனை லிபவி சரியாகச் செய்திருக்கிறார். இவர் ஆரோக்கியமான உடல்நலத்துடன் இருக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்மூலம் ஒட்டுமொத்த நாட்டின் கவனத்தையும் சிறுமி லிபவி ஈர்த்துள்ளார். லிபவி சமூக அக்கறை கொண்ட ஹீரோ. பொறுப்புள்ள குடிமகள். அவருக்கு ஏராளமான அன்பும், ஆசிர்வாதங்களும் சென்று சேரட்டும் என்றெல்லாம் பலரும் வாழ்த்தி வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

30 துப்பாக்கிக் குண்டுகள் முழங்க கர்நாடக அரசு மரியாதையுடன் இசையரசி எஸ்.ஜானகி உடல் தகனம்

மறைந்த பிரபல பின்​னணி பாடகி எஸ்​.ஜானகி​யின் உடல், கர்​நாடக அரசின் முழு...

நீர்கொழும்பு சிறை விசாரணையில் பல மர்மங்கள்

6ஆம் திகதி நீர்கொழும்பு சிறையில் நடந்த மோதலின் போது 8 சிறைச்சாலை...

டெங்கு அபாயத்திலிருந்து மீள்கிறது கொழும்பு பல்கலைக்கழக அழகியல் பீடம்

டெங்கு பரவல் காரணமாக இரண்டு வாரங்களுக்கு மூடப்பட்டிருந்த கொழும்பு அழகியல் பல்கலைக்கழகத்தை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்