டெங்கு அபாயத்திலிருந்து மீள்கிறது கொழும்பு பல்கலைக்கழக அழகியல் பீடம்

Date:

டெங்கு பரவல் காரணமாக இரண்டு வாரங்களுக்கு மூடப்பட்டிருந்த கொழும்பு அழகியல் பல்கலைக்கழகத்தை இன்று (13) முதல் மீண்டும் திறக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் பிரதித் தலைவர் பேராசிரியர் வசந்த குமார, நேற்று (12) தெரிவித்தார்.

கொழும்பு பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்களிடையே டெங்கு நோய்த்தொற்று அதிகரித்துள்ளதால், அறிவியல் பீடத்தை தற்காலிகமாக மூடி, கல்வி நடவடிக்கைகளை இணையவழியில் நடத்த நிர்வாகம் இன்று (13) முடிவு செய்யும் என அவர் கூறினார்.

பல்கலைக்கழகத்தின் கலை பீடம் தற்போது தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும், மாணவர்களுக்கு இணையவழியில் கல்வி வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

தூய்மையான இலங்கை திட்டத்தின் ஒரு பகுதியாக, அழகியல் பல்கலைக்கழகத்தில் நேற்று (12) தூய்மைப்படுத்துதல் மற்றும் புகை இடும் திட்டம் நடைபெற்றது. பல்கலைக்கழக வளாகம் டெங்கு இல்லாத இடமாக மாற்றப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அழகியல் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் சானி இம்புல்கொட தெரிவித்தார்.

தூய்மையான இலங்கைத் திட்டம், கொழும்பு மாநகர சபை, சுகாதார அமைச்சு மற்றும் முப்படைகள் இதற்குப் பங்களித்துள்ளன என்றும் அவர் கூறினார்.

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததன் காரணமாக, மொரட்டுவ பல்கலைக்கழகம் இவ்மாதம் 7ஆம் திகதி தற்காலிகமாக மூடப்பட்டதுடன், இவ்மாதம் 21ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 17 பல்கலைக்கழகங்கள் நிறுவப்பட்டுள்ள நிலையில், பிற பல்கலைக்கழகங்களைத் தற்காலிகமாக மூட வேண்டிய அவசியம் ஏற்படவில்லை என்றும், தேவைக்கேற்ப பல்கலைக்கழகங்களில் இணையவழியில் கற்றல் நடவடிக்கைகளை நடத்துவது குறித்து நிர்வாகம் முடிவெடுக்கும் என்றும் அவர் கூறினார்.

spot_imgspot_img

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் விசாரணை நிறைவு

2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறன்று நாட்டின் கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும்...

வெப்பமான வானிலை குறித்து ‘அம்பர்’ எச்சரிக்கை!

வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை அனர்த்தம் தொடர்பான முன்னெச்சரிக்கை பிரிவினால் வெப்பமான வானிலை...

35 வருட வெள்ளைப் பணிக்கு ஓய்வு!

அன்பும், அர்ப்பணிப்பும் நிறைந்த ஒரு நீண்டகால வைத்தியசாலைப் பணியை வெற்றிகரமாக நிறைவு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்