ஜெயலலிதா கொடுத்த பெண் சிங்கம்தான் covid-19னால் பலியானது!

Date:

வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள 13 சிங்கங்களுக்கு கொரோனா அறிகுறிகள் காணப்பட்டுள்ளது. இதையடுத்து விலங்குகளுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

பரிசோதனை முடிவில் 9 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று இருந்தது தெரிய வந்துள்ளது. அதில் நிலா என்ற 9 வயது பெண் சிங்கம் சிகிச்சை பலனளிக்காமல் கொரோனா பாதிப்பு காரணமாக 3ஆம் திகதி உயிரிழந்துள்ளது.

இதேபோன்ற இறப்பு நாட்டில் உள்ள பல்வேறு வன உயிரியல் பூங்காவில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக வனத்துறையினர் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருந்தனர்.

இதற்கிடையே உயிரிழந்த 9 வயது பெண் சிங்கம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வண்டலூர் உயிரியல் பூங்காவிற்குப் பெற்றுத்தந்தது இப்போது தெரியவந்ததுள்ளது. ஜெயலலிதாதான் குறிப்பிட்ட பெண் சிங்கத்திற்கு நிலா எனப் பெயர் சூட்டியுள்ளார்.

இந்த பெண் சிங்கம் கடந்த 2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27ஆம் திகதி பெண் குட்டி ஒன்றை ஈன்றது. அந்த குட்டிக்கு அப்போதைய தமிழ்நாட்டு முதல்வர் பழனிசாமி ஜெயா எனப் பெயர் சூட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

வடமாகாண புதிய சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் கடமையேற்பு

வடமாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸமா அதிபர் தினேஸ் கருணாணாயக்க இன்றையதினம் தனது...

முன்னாள் அமைச்சரின் மனைவி மாடியிலிருந்து தவறிவிழுந்து பலி

முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமாரவின் மனைவி, 55 வயதான தேஷானி குணரத்ன,...

திடீர் ஆய்வில் பயன்பாட்டிற்கு தகுதியற்ற 28 வாகனங்கள் சிக்கின

தலவாகல்ல பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டபோது, ​​28 வாகனங்கள் இயக்கத்திற்குத் தகுதியற்றவை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்