எம்.வி எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் இருந்து எண்ணெய் கசிவு ஏற்பட்டால் இலங்கைக்கு பேரழிவு தரக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்தக்கூடும் என்று கடல் உயிரியலாளர் ஆஷா டி வோஸ் எச்சரித்துள்ளார்.
சி.என்.என் நியூஸுடன் பேசிய ஆஷா டி வோஸ், எண்ணெய் கசிவு நாட்டின் கடலோரப் பகுதியில் நீண்ட கால தாக்கத்தை ஏற்படுத்தும் என்றார்.
இது கடல் சூழலில் பாரிய எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறினார்.
எம்.வி எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் இரசாயனங்களை கொண்டு செல்லும்போது கொழும்பு கடற்கரையில் தீப்பிடித்தது. கப்பலின் இருந்த சரக்குகள் பிளாஸ்டிக் துகள்கள் மற்றும் குப்பைகள் கரையொதுங்கி வருகிறது.
இலங்கை கடலிலிருந்து கப்பலை மேற்கு நோக்கி ஆழ் கடல்களுக்குள் இழுக்கும் நடவடிக்கைகள் நேற்று நிறுத்தப்பட்டன, படகு மூழ்கத் தொடங்கி கடற்படுக்கையில் மோதியது. இருப்பினும், கப்பலில் இருந்து எண்ணெய் கசிவு இதுவரை தெரிவிக்கப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
A ship in #SriLankan waters is threatening to cause an environmental catastrophe. I ask Marine Biologist @ashadevos how bad this could be & what damage has already been done. She joins me from Colombo. #SriLanka pic.twitter.com/QIoxbuEicm
— Rosemary Church (@rosemaryCNN) June 3, 2021



