மட்டக்களபபில் பொலிசாரின் தடுப்பு காவலில் இருந்த போது உயிரிழந்த இளைஞனின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளதாக பொலிசார் அறிவித்துள்ளனர்.
அதன்படி, இளைஞன் அதிக ஐஸ் போதைப்பொருளை பாவித்தமையினாலேயே உயிரிழந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு இருதயபுரத்தை சேர்ந்த 22 வயதான இளைஞன் ஒருவர் நேற்றிரவு மட்டக்களப்பு தலைமையக பொலிசாரால் கைது செய்யப்பட்ட நிலையில் இன்று சடலமாக வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டார்.
அவர் பொலிசாரால் தாக்கப்பட்டு இறந்ததாக உயிரிழந்த இளைஞனின் உறவினர்கள் குற்றம்சாட்டியிருந்தனர்.



