29.5 C
Jaffna
March 28, 2024
இலங்கை

புதூர் நாகதம்பிரான் பொங்கலிற்கு 15 பேருக்கு அனுமதி!

வரலாற்று பிரசித்திபெற்ற வவுனியா புளியங்குளம் புதூர் நாகதம்பிரான் ஆலய பொங்கல் விழாவிற்கு 15 பேருக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

புளியங்குளம் புதூர் நாகரம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல் விழாநிகழ்வு எதிர்வரும் ஏழாம் திகதி இடம்பெறவுள்ளது.

குறித்த நிகழ்வினை நடாத்துவது தொடர்பாக வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தில் இன்று விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதன்போது கொரோனா வைரஸ் பரவலைக்கருத்தில் கொண்டு மடுப்படுத்தப்பட்ட வகையில் குறித்த நகழ்வினை நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன்,
விசேடபூஜைகள் மற்றும் கிரியைகளை முன்னெடுக்கும் 15பேருக்கு மாத்திரம் பொங்கல் நிகழ்வில் கலந்துகொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த கலந்துரையாடலில் வவுனியா வடக்கு பிரதேச செயலாளர், புதூர் ஆல யநிர்வாகத்தினர், வவுனியா வடக்கு சுகாதாரவைத்திய அதிகாரி, மற்றும் பொலிசார் கலந்துகொண்டனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வெள்ளோட்டத்துக்கு முன்னர் நடந்த விபரீதம்!

Pagetamil

மசாஜ் நிலைய பெண்கள் இருவருக்கு எயிட்ஸ்: கலக்கத்தில் வாடிக்கையாளர்கள்!

Pagetamil

கிராண்ட்பாஸில் தீப்பற்றிய டயர் கடை!

Pagetamil

வவுனியாவில் சடலமாக மீட்கப்பட்ட இளம் யுவதி!

Pagetamil

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்

Pagetamil

Leave a Comment