கொரோனா பாதிப்பை உலகில் இருந்து விரட்டி அடிக்க திருப்பதியில் 16 மணி நேரம் பிரார்த்தனை!

Date:

வைரஸ் தொற்றை தடுக்கும் வகையில் தொடர்ந்து 16 மணி நேரம் சுந்தரகாண்ட பாராயண மகா யாகம் நடைபெறவுள்ளது.

ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் ஏழுமலையான் திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு சாமி தரிசனம் செய்ய நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்த வண்ணம் இருந்தனர். இதனால் குவியும் நன்கொடைகளால் உலகின் பணக்கார கடவுளாக ஏழுமலையான் திகழ்ந்தார். ஆனால் கொரோனா சூழல் எல்லாவற்றையும் தலைகீழாக புரட்டி போட்டிருக்கிறது. பக்தர்கள் வரத்து குறைவால் உண்டியல் வசூல் அதள பாதாளத்திற்கு சென்றது.

வரலாறு காணாத பெரும் பொருளாதார நெருக்கடியை திருமலை திருப்பதி தேவஸ்தானம் சந்தித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க கடந்த ஓராண்டாகவே பல்வேறு பக்தி மயமான நிகழ்வுகளை தேவஸ்தானம் முன்னெடுத்து வருகிறது. இதன் ஒருபகுதியாக நாளை (மே 31) காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை தொடர்ந்து 16 மணி நேரம் சுந்தரகாண்ட பாராயண மகா யாகம் நடக்கவுள்ளது. இதில் 40 வேத பண்டிதர்கள் நான்கு குழுவாக கலந்து கொள்கின்றனர்.

ஒவ்வொரு குழுவிலும் தலா 10 பேர் இடம்பெறுவர். இதனை உலக மக்கள் நேரலையில் கண்டு ரசிக்கும் வண்ணம் SVBC சேனல் மூலம் ஒளிபரப்பு செய்யப்படும். நாளைய தினம் SVBC சேனலில் திட்டமிடப்பட்டிருந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டு சுந்தரகாண்ட பாராயண மகா யாகம் ஒளிபரப்பப்படவுள்ளது. அதேசமயம் ஸ்ரீவாரி கல்யாணம் மற்றும் சகஸ்ர தீபாலங்கார சேவா ஆகியவற்றிற்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி ஏ.வி.தர்மா ரெட்டி கூறுகையில், கொரோனா பெருந்தொற்றால் உலகம் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகிறது. இதனை முழுவதுமாக அகற்ற தேவஸ்தானம் பல்வேறு வழிபாட்டு நிகழ்வுகளை நடத்தி வருகிறது. இதற்கு ஏழுமலையான் பக்தர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் நாளை நடைபெறவுள்ள சுந்தரகாண்ட பாராயண மகா யாகம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

இந்த நிகழ்வில் கொரோனா வைரஸ் பாதிப்பை இந்த உலகில் இருந்து விரட்ட பிரார்த்தனை செய்யப்படும் என்று தெரிவித்தார். உலக மக்களும் கொரோனா வைரஸ் எப்போதும் முழுவதுமாக நீங்கும் என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

வடமாகாண புதிய சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் கடமையேற்பு

வடமாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸமா அதிபர் தினேஸ் கருணாணாயக்க இன்றையதினம் தனது...

முன்னாள் அமைச்சரின் மனைவி மாடியிலிருந்து தவறிவிழுந்து பலி

முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமாரவின் மனைவி, 55 வயதான தேஷானி குணரத்ன,...

திடீர் ஆய்வில் பயன்பாட்டிற்கு தகுதியற்ற 28 வாகனங்கள் சிக்கின

தலவாகல்ல பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டபோது, ​​28 வாகனங்கள் இயக்கத்திற்குத் தகுதியற்றவை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்