பிரதமரின் செலவுகள் குறித்து பின்லாந்து பொலீஸ் விசாரணை!

Date:

பின்லாந்து பிரதமர் காலை உணவுக்கு அரசு பணத்தை செலவு செய்ததாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக விசாரிக்கப்படும் என அந்நாட்டு காவல்துறை தெரிவித்துள்ளது.

பின்லாந்து நாட்டின் பிரதமர் சன்னா மரினின் காலை உணவுக்கு மக்கள் வரிப் பணத்தில் சட்டவிரோதமாக செலவு செய்யப்படுவதாக அந்நாட்டை சேர்ந்த Iltalehti என்ற ஊடகம் தகவல் வெளியிட்டது. இந்நிலையில், இவ்விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்படும் என பின்லாந்து காவல்துறை தெரிவித்துள்ளது.

பிரதமர் சன்னா மரின் தங்கியிருக்கும் அரசு இல்லத்தில் ஒவ்வொரு மாதமும் காலை உணவுக்காக 300 யூரோ அரசு பணத்தில் இருந்து செலவு செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இவ்விவகாரம் பின்லாந்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இருப்பினும், தான் எந்தவொரு விதிமுறையையும் மீறவில்லை எனவும், முந்தைய பிரதமர்களும் இதே சலுகையை அனுபவித்ததாகவும் பிரதமர் சன்னா மரின் தெரிவித்துள்ளார். அவர் ட்விட்டரில், “ஒரு பிரதமராக நான் இந்த சலுகையை கேட்கவில்லை. இதுபற்றி முடிவெடுக்கும் அதிகாரமும் எனக்கில்லை.

நான் பதவிக்கு வந்தபோது எனக்கான சலுகைகள் பற்றி என்னிடம் தெரிவிக்கப்பட்டது. இதே சலுகைகளை முந்தைய பிரதமர்களும் அனுபவித்துள்ளனர். அதிகாரிகளிடம் இருந்து பெற்ற தகவலின்படி இச்சலுகையை பெற்றேன்.

நானாக கட்டணம் எதையும் செலுத்தவில்லை. பிரதமர் அலுவலகமும், அதன் அதிகாரிகளும்தான் நேரடியாக கட்டணம் செலுத்தியுள்ளனர்” என்று தெரிவித்துள்ளார். எனினும், இவ்விவகாரம் குறித்து முறையாக விசாரணை நடத்தப்படும் என பின்லாந்து காவல்துறை தெரிவித்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

பசிலின் பணத்தை பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவு!

மாத்தறையில் 1.5 ஏக்கர் நிலத்தை முறைகேடாகப் பெறப்பட்ட நிதியைப் பயன்படுத்தி வாங்கியதாகக்...

கிளிநொச்சியில் புலிகளின் முகாமா?: அரசு விளக்கம்!

பளை (Palai) வனப்பகுதிக்குள் புலிகள் இயக்கத்தின் முகாம் ஒன்று இருப்பதாகச் சமூக...

சிறுநீர்ப்பையிலிருந்த 3.1 Kg கல் அகற்றல்: திருமலை வைத்தியசாலையில் சம்பவம்!

திருகோணமலையில் உள்ள ஒரு மருத்துவமனையில், 55 வயது நோயாளி ஒருவரிடமிருந்து 3.1...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்