முதன்முறையாக நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட சூகி!

Date:

மியன்­மா­ரின் முன்­னாள் தலை­வர் ஆங் சான் சூகி நேற்று முன்தினம் நீதி­மன்­றத்­தில் முன்­னி­லைப் படுத்­தப்­பட்­டார்.

சென்ற பெப்­ர­வரி 1ஆம் திகதி நடந்த ஆட்சி கவிழ்ப்­பிற்­குப் பிறகு முதன்­மு­றை­யாக நேற்று முன்தினம் அவர் வெளி­யு­ல­கில் காணப்­பட்­டார்.

ஆங் சான் சூச்­சி­யின் ஆட்­சி­யைக் கைப்­பற்­றிய இராணு­வம் அவர் உட்­பட 4,000 பேரைத் தடுப்பு காவ­லில் வைத்­தி­ருந்­தது குறிப்­பி­டத்­தக்­கது.

சட்­ட­வி­ரோ­த­மாக தொலைத்தொடர்பு சாதனங்களை வைத்­தி­ருந்­தது, அர­சாங்க இரக­சிய சட்­டத்தை மீறு­வது உள்­ளிட்ட குற்­றச்­சாட்­டு­களை அவர் எதிர்­கொள்­கி­றார்.

நீதி­மன்­றத்­தில் காணப்­பட்ட சூகி, 75, நல்ல உடல்நலத்­து­டன் இருந்­த­தா­க­வும் விசா­ர­ணைக்கு முன்பு அவ­ரது சட்­டக் குழு­வு­டன் 30 நிமிட சந்­திப்பு நடத்­தி­ய­தா­க­வும் அவ­ரது சட்டத்தரணி தாயே மவுங் மவுங் கூறி­னார்.

தனது சட்டத்தரணிக­ளு­ட­னான சந்­திப்­பின்­போது ‘மக்­க­ளின் ஆரோக்­கி­யத்தை விரும்­பு­வ­தாக’ அவர் சொன்­னார். மேலும் விரை­வில் கலைக்­கப்­ப­டக்­கூ­டும் என்று எதிர்­பார்க்­கப்­படும் சூகியின் ஜன­நா­யக தேசிய லீக் கட்­சி­யைப் பற்றி­யும் அவர் வெளிப்படை­யாக குறிப்­பிட்­டார்.

“மக்­க­ளுக்­காக கட்சி நிறு­வப்­பட்­டது, எனவே மக்­கள் இருக்­கும் வரை கட்சி இருக்­கும்” என்று சூகி சொன்­ன­தாக மவுங் கூறி­னார்.

கடந்த நவம்­பர் மாதம் நடந்த தேர்­த­லில் சூகி­யின் கட்சி மோசடி செய்­த­தா­கக் கூறும் இராணுவ ஆட்­சிக் குழு­வின் தேர்­தல் ஆணை­யம் அவ­ரது கட்­சி­யைக் கலைக்­கப்­போ­வ­தாக ஆணை­யரை மேற்­கோள்­காட்டி வெளிவந்த வெள்­ளிக்­கி­ழமை ஊடக செய்தி தெரி­வித்­தி­ருந்தது.

spot_imgspot_img

More like this
Related

பேத்தியை சீரழித்த தாத்தாவுக்கு 15 வருட சிறை

12 வயதுடைய சொந்த பேத்தியைத் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 81 வயதுடைய...

மட்டக்களப்பு மாமாங்கத்தில் மோட்டார் சைக்கிள் சீற்றை உடைத்து தங்க ஆபரணங்களை திருடிய திருடன் ஒருவர் கைது

மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய அன்னதான மடத்திற்கு  சென்ற பெண் ஒருவர் நிறுத்தி...

“குடிபுகு சான்றிதழ் விவகாரத்தில் ஆளுநர் என்னை தவறாக வழிநடத்துகிறார்” – கிஷோர்

குடிபுகு சான்றிதழ் முறைமையை நடைமுறைப்படுத்தினால் உள்ளூராட்சி மன்றங்களுக்கு பாரிய வருமான இழப்பு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்