பாபா ராம்தேவ் மீது ரூ.1000 கோடி அவதூறு வழக்கு; இந்திய மருத்துவ சங்கம் அதிரடி!

Date:

நவீன மருத்துவ முறை குறித்து அவதூறாக பேசியதற்காக பாபா ராம்தேவுக்கு இந்திய மருத்துவ சங்கம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அலோபதி நவீன மருத்துவ முறை முட்டாள்தனமானது எனவும், தோல்வியடைந்தது எனவும்
பாபா ராம்தேவ் பேசிய வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு இந்திய மருத்துவ சங்கம் கண்டனம் தெரிவித்து, பாபா ராம்தேவ் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தனிடம் வலியுறுத்தியது.

இதைத்தொடர்ந்து, பாபா ராம்தேவ் தனது கருத்துகளை திரும்பப் பெற வேண்டுமென அமைச்சர் ஹர்ஷ் வர்தன் அறிவுறித்தினார். பின்னர், இந்திய மருத்துவ சங்கத்துக்கு பாபா ராம்தேவ் 25 கேள்விகளை முன்வைத்தார். அதில், அலோபதி மருத்துவ முறையால் நோயாளிகளுக்கு நிரந்தர தீர்வு கிடைப்பதில்லை எனவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அலோபதி மருத்துவ முறை மற்றும் அலோபதி மருத்துவர்கள் குறித்து அவதூறாக பேசியதற்காக பாபா ராம்தேவுக்கு இந்திய மருத்துவ சங்கம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதில், பாபா ராம்தேவ் 15 நாட்களுக்குள் மன்னிப்பு கேட்க வேண்டுமெனவும், தவறினால் 1000 கோடி ரூபாய் இழப்பீடு கோரப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

பாபா ராம்தேவின் பேச்சு இந்திய மருத்துவ சங்கத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதாகவும், அலோபதி மருத்துவ முறை மற்றும் சங்கத்தை சேர்ந்த 2000 மருத்துவர்களை அவமதிப்பதாகவும் இருப்பதாக இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.

இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 499 கீழ் பாபா ராம்தேவின் பேச்சு குற்றச் செயல் எனவும் இந்திய மருத்துவ சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. எனவே, 15 நாட்களுக்குள் பாபா ராம்தேவ் எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கேட்க வேண்டும், தவறினால் 1000 கோடி ரூபாய் இழப்பீடு கோரப்படும் என இந்திய மருத்துவ சங்கம் எச்சரித்துள்ளது.

பதஞ்சலி நிறுவனத்தின் கொரோனில் கிட் விளம்பரங்கள் மக்களை தவறாக வழிநடத்தும் வகையில் இருப்பதால் அவற்றை வாபஸ் பெற வேண்டுமெனவும் இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

பேத்தியை சீரழித்த தாத்தாவுக்கு 15 வருட சிறை

12 வயதுடைய சொந்த பேத்தியைத் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 81 வயதுடைய...

மட்டக்களப்பு மாமாங்கத்தில் மோட்டார் சைக்கிள் சீற்றை உடைத்து தங்க ஆபரணங்களை திருடிய திருடன் ஒருவர் கைது

மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய அன்னதான மடத்திற்கு  சென்ற பெண் ஒருவர் நிறுத்தி...

“குடிபுகு சான்றிதழ் விவகாரத்தில் ஆளுநர் என்னை தவறாக வழிநடத்துகிறார்” – கிஷோர்

குடிபுகு சான்றிதழ் முறைமையை நடைமுறைப்படுத்தினால் உள்ளூராட்சி மன்றங்களுக்கு பாரிய வருமான இழப்பு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்