பளையில் குளத்தில் மிதந்த பெண்ணின் சடலம்!

Date:

பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பளை தம்பகாமம் இன்நாசி குளத்தில் பெண் ஒருவரின் சடலம் இன்று காலை (23) மீட்கப்பட்டுள்ளது

சடலமாக மீட்கப்பட்ட பெண் தம்பகாமம் பகுதியை சேர்ந்த 47 வயதுடைய பொன்னையா வனஜா என்பவர் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த பெண் நேற்றைய தினம் காணாமல் போன நிலையில் உறவினர்கள் தேடி அலைந்துள்ளனர். இந்நிலையில் இன்று காலை குறித்த பெண்ணின் சகோதரரால், பெண்ணின் சடலம் குளத்தில் மிதப்பது கண்டறியப்பட்டதாக பளை பொலீசாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு வந்த பளை பொலீசார் மற்றும் இராணுவத்தினர் மக்களின் உதவியுடன் சடலத்தினை மீட்டதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு
வருகின்றனர்.

பெண்ணின் சடலம் திடீர் மரண விசாரணை அதிகாரி மற்றும் நீதிபதி ஆகியோர் பார்வையிட்டு விசாரணைகள் நிறைவடைந்தபின் பிரேத பரிசோதனை மற்றும்
பி சி ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பதவுள்ளதாக பளை பொலீசார் தெரிவித்தனர்.

spot_imgspot_img

More like this
Related

பேத்தியை சீரழித்த தாத்தாவுக்கு 15 வருட சிறை

12 வயதுடைய சொந்த பேத்தியைத் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 81 வயதுடைய...

மட்டக்களப்பு மாமாங்கத்தில் மோட்டார் சைக்கிள் சீற்றை உடைத்து தங்க ஆபரணங்களை திருடிய திருடன் ஒருவர் கைது

மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய அன்னதான மடத்திற்கு  சென்ற பெண் ஒருவர் நிறுத்தி...

“குடிபுகு சான்றிதழ் விவகாரத்தில் ஆளுநர் என்னை தவறாக வழிநடத்துகிறார்” – கிஷோர்

குடிபுகு சான்றிதழ் முறைமையை நடைமுறைப்படுத்தினால் உள்ளூராட்சி மன்றங்களுக்கு பாரிய வருமான இழப்பு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்