அமெரிக்க திரையரங்குகள் 14 மாதத்துக்கு பிறகு மீண்டும் திறப்பு!

Date:

அமெரிக்காவிசல் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் மூடப்பட்ட தியேட்டர்கள் சுமார் 14 மாதங்களுக்கு பிறகு,தற்போது திறக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் சீனாவில் இருந்து பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ், 2020ம் ஆண்டு ஜனவரியில் அமெரிக்காவில் பரவத்தொடங்கியது. ஆரம்ப காலத்தில் தொற்று பரவலை டிரம்ப் நிர்வாகம் கண்டுகொள்ளாததால், தொற்றின் தாக்கத்தால் தினசரி ஆயிரக்கணக்கா னார் உயிரிழந்தனர். இதனால், ஹாலிவுட் சினிமா தயாரிப்பு, வெளியீடு, திரையிடல் ஆகியவற்றில் பெரும் பாதிப்பைச் சந்தித்தது. அதன் காரணமாக சர்வதேச சினிமா வியாபாரம் முடங்கியது. 2020 இல் மார்ச் மாதம் முதல் அமெரிக்காவின் அனைத்து மாகாணங்களிலும் திரையரங்குகள் மூடப்பட்டன.

பின்னர் அங்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, அதிபராக ஜோ பைடன் பதவி ஏற்றதும், அவர் மேற்கொண்டு வரும் அதிரட நடவடிக்கை காரணமாக, கொரோனா கட்டுக்குள் உள்ளது. 2 டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள் முக்கவசம் அணியத் தேவையில்லை என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. மக்கள் சகஜமான வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர்.

இதையடுத்து, அங்கு திரையரங்குகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளன. அதன் காரணமாக, ஹாலிவுட் தலைநகரமான கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 14 மாதங்களுக்குப் பிறகு திரையரங்குகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. இதை திரைத்துறையினர், ‘மீண்டும் பெரிய திரை’ என்று கொண்டாடி மகிழ்ந்தனர்.

இந்த நிகழ்ச்சியில் மூத்த நடிகரும், முன்னாள் கவர்னருமான அர்னால்ட் ஸ்வார்சுநேகர், நடிகர் சாம் ரிச்சர்ட், நடிகை மேத்திக்கியூ உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் ரிலீஸுக்குத் தயாரான ‘தி ப்ரோடேஜ்’ படத்தின் டிரெய்லர் திரையிடப்பட்டது. 14 மாதங்களுக்குப் பின் அகன்ற திரையில் சினிமா பார்த்த பார்வையாளர்கள் ஆரவாரம் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

 

Share post:

spot_imgspot_img

More like this
Related

சட்டத்தரணியின் அடிப்படை உரிமைகளை மீறியதால் ரூ.60,000 இழப்பீடு வழங்க பொலிஸ் பேச்சாளருக்கு நீதிமன்றம் உத்தரவு!

2017 ஆம் ஆண்டு நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் நடந்த ஒரு சம்பவத்தின்...

பாடசாலைகளில் உடல்ரீதியான தண்டனைக்கு தடை: கல்வி அமைச்சு உத்தரவு!

மாணவர்களுக்கு உடல்ரீதியான தண்டனை அளிப்பதும், எந்த விதமான உடல் அல்லது மனரீதியான...

இயக்கச்சியில் காணி சுவீகரிப்புக்கு எதிராக போராட்டம்

கிளிநொச்சி பச்சிளைப்பள்ளி பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட இயக்கச்சியில் உள்ள நான்காவது இலங்கை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்