தடுப்பூசி போட்டது போன்று நடித்தாரா? ; சர்ச்சையில் சிக்கிய நயன்தாரா!

Date:

கொரோனாவின் இரண்டாம் அலையால் இந்தியா மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களுக்கு பெட், ஆக்சிஜன் சிலிண்டர், ரெம்டெசிவிர் மருந்து கிடைக்காமல் அல்லாடுகிறார்கள்.

இந்நிலையில் பலரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டிருக்கிறார்கள். திரையுலக பிரபலங்கள் தடுப்பூசி போடும் போது புகைப்படம் அல்லது வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிடுகிறார்கள். தங்களை போன்று தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு ரசிகர்களை கேட்டுக் கொள்கிறார்கள்.

இந்நிலையில் நயன்தாராவும், அவரின் காதலரான இயக்குநர் விக்னேஷ் சிவனும் சென்னையில் இருக்கும் குமரன் மருத்துவமனையில் தடுப்பூசி போட்டுக் கொண்டார்கள். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்களை விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்.

அதில் நயன்தாராவின் புகைப்படத்தை பார்த்தவர்களோ, நர்ஸ் கையில் ஊசியே இல்லை. ஊசி இல்லாமல் சும்மா புகைப்படத்திற்கு போஸ் கொடுத்திருக்கிறார் நயன்தாரா. விக்னேஷ் சிவன் மட்டும் தான் தடுப்பூசி போட்டுக் கொண்டிருக்கிறார். தடுப்பூசியிலும் விளம்பரமா என்று கேள்வி எழுப்பினார்கள்.

நயன்தாரா நிஜமாகவே தடுப்பூசி போட்டுக் கொண்டார். நர்ஸ் தன் விரல்களால் ஊசியை மறைத்துவிட்டதால் அது புகைப்படத்தில் தெரியவில்லை என்று நயன்தாரா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் அதை ரசிகர்கள் நம்ப தயாராக இல்லை.

ஒரு தடுப்பூசி போடப் போய் இப்படி சர்ச்சையில் சிக்கியுள்ளார் நயன்தாரா. கெரியரை பொறுத்தை வரை சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினியுடன் சேர்ந்து அண்ணாத்த படத்தில் நடித்து முடித்துள்ளார் நயன்தாரா.

நயன்தாரா தடுப்பூசி போட்டுக் கொண்ட விவகாரம்!நெட்டிசன்களுக்கு கொடுத்த பதிலடி:  அதிகாரப்பூர்வ விளக்கம் - லங்காசிறி நியூஸ்
மேலும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடிக்கவிருக்கிறார். முக்கோண காதல் கதை கொண்ட அந்த படத்தின் இன்னொரு ஹீரோயினாக சமந்தா நடிக்கிறார். விக்னேஷ் சிவனுக்கு ராசியான விஜய் சேதுபதி தான் ஹீரோ.

கோலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் இரண்டு நடிகைகளை வைத்து படம் எடுத்து வருகிறார் விக்னேஷ் சிவன். கொரோனாவின் இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ளதால் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

spot_imgspot_img

More like this
Related

பேத்தியை சீரழித்த தாத்தாவுக்கு 15 வருட சிறை

12 வயதுடைய சொந்த பேத்தியைத் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 81 வயதுடைய...

மட்டக்களப்பு மாமாங்கத்தில் மோட்டார் சைக்கிள் சீற்றை உடைத்து தங்க ஆபரணங்களை திருடிய திருடன் ஒருவர் கைது

மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய அன்னதான மடத்திற்கு  சென்ற பெண் ஒருவர் நிறுத்தி...

“குடிபுகு சான்றிதழ் விவகாரத்தில் ஆளுநர் என்னை தவறாக வழிநடத்துகிறார்” – கிஷோர்

குடிபுகு சான்றிதழ் முறைமையை நடைமுறைப்படுத்தினால் உள்ளூராட்சி மன்றங்களுக்கு பாரிய வருமான இழப்பு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்