கி.ரா.வுக்கு சிலை… புகைப்படங்கள், படைப்புகளை காட்சிப்படுத்த ஓர் அரங்கம் : தமிழக அரசு அறிவிப்பு!

Date:

மறைந்த எழுத்தாளர் ‘கரிசல் குயில்’ கி.ராவுக்கு கோவில்பட்டியில் அரசு சார்பில் சிலை அமைக்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- கி.ரா. அவர்களின்‌ புகழுக்குப்‌ பெருமை சேர்க்கும்‌ வகையில்‌ மாண்புமிகு முதலமைச்சர்‌ திரு. மு.க. ஸ்டாலின்‌ அவர்களது அறிவிப்புகள்‌ தமிழ்‌ இலக்கியத்திற்குச்‌ செழுமை சேர்த்த கரிசல்காட்டு எழுத்தாளர்‌ கி.ராஜநாராயணன்‌ (கி.ரா.) அவர்கள்‌ ஏட்டறிவைக்‌ காட்டிலும்‌ பட்டறிவால்‌ பல
இலக்கியப்‌ படைப்புகளைத்‌ தந்தவர்‌; வட்டார வழக்கு சார்ந்த இலக்கியப்‌ படைப்புகளுக்கு முன்னோடியாகத்‌ திகழ்ந்தவர்‌.

மறைந்த எழுத்தாளர்‌ கி.ரா. அவர்கள்‌ படித்த இடைசெவல்‌ ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்‌ பள்ளியை அரசு சார்பில்‌ பழமை மாறாமல்‌ புதுப்பிக்கவும்‌, அவரது நினைவினைப்‌ போற்றும்‌ வகையிலும்‌ அவரது படைப்பாளுமையை வெளிப்படுத்தும்‌ வகையிலும்‌ அவருடைய புகைப்படங்கள்‌ – படைப்புகள்‌ ஆகியவற்றை மாணவர்களும்‌ பொது மக்களும்‌ அறிந்துகொள்ளும்‌ வகையில்‌ ஒர்‌ அரங்கம்‌
நிறுவப்படும்‌.

கரிசல்‌ இலக்கியத்தை உலகறியச்‌ செய்த பிதாமகர்‌ கி.ரா. அவர்களுக்கு கோவில்பட்டியில்‌ அரசு சார்பில்‌ சிலை அமைக்கப்படும்‌ எனவும்‌ தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌, என தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

மட்டு நகரில் கடை தொகுதிகள் தீப்பற்றியதை தீயணைப்பு படையினர் 4 மணித்தியால போராட்டத்தின் பின்னர் தீயை கட்டுப்பாட்டில்

மட்டக்களப்பு நகரில் சென்றல் வீதி மற்றும் பஸார் வீதியிலுள்ள கடைகள் இன்று...

வெனிசுலா நிலநடுக்க உயிரிழப்பு 3,500ஐ கடந்தது!

வெனிசுலாவின் இரட்டை நிலநடுக்கங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,535 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள்...

நீர்கொழும்பு சிறைக்கலவரம்: துப்பாக்கிகளை பறித்து சுட்ட கைதிகள்!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவம் குறித்து முறையான மற்றும் விரிவான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்