உத்தரபிரதேசத்தில் மீரட் நகரில் ஏப்ரல் 23 அன்று 24 வயதை எட்டிய இரட்டையர்களான இரண்டு சகோதரர்கள், மே 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் தொடர்ந்து ஒன்றன் பின் ஒன்றாக இருவரும் தங்கள் உயிர்களை இழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜோஃப்ரெட் வர்கீஸ் கிரிகோரி மற்றும் ரால்பிரட் ஜார்ஜ் கிரிகோரி ஆகிய இரட்டை சகோதரர்களுக்கும் ஏப்ரல் 24 ஆம் தேதி, அவர்களின் பிறந்தநாளுக்கு ஒரு நாள் கழித்து வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது
அவர்களின் தந்தை ரபேல், தனது மகன்கள் ஒன்றாக வீட்டிற்கு குணமடைந்து வருவார்கள் அல்லது இருவருமே திரும்பி வரமாட்டார்கள் என்பது அவருக்குத் தெரியும் என்று கூறினார். அவர், ஊடகங்களுடன் பேசியபோது, ஜியோஃப்ரெட் இறந்த செய்தியைக் கேட்டபின், ரால்பிரட் தனியாக வீடு திரும்ப மாட்டார் என்று தனது மனைவியிடம் கூறினார்.
காய்ச்சல் குறையக்கூடும் என்று நினைத்து குடும்பத்தினர் ஆரம்பத்தில் வீட்டில் மகன்களுக்கு சிகிச்சை அளித்து வருவதாக அக்கம்பக்கத்தினர் ஊடகங்களுக்குத் தெரிவித்தனர். இருப்பினும், அவர்களின் ஆக்ஸிஜன் அளவு 90 ஆகக் குறைந்தபோது, இரு சகோதரர்களையும் மருத்துவமனையில் அனுமதிக்குமாறு மருத்துவர்கள் குடும்பத்திற்கு அறிவுறுத்தினர்.
பின்னர் அவர்கள் மே 1 அன்று ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களின் முதல் கொரோனா அறிக்கை நேர்மறையாக வெளிவந்த நிலையில், இரண்டாவது அறிக்கை எதிர்மறையாக வெளிவந்தது.
மே 13 மாலை, ஜியோஃப்ரெட்டின் மரணம் குறித்து ரபேலின் மனைவிக்கு மருத்துவமனையில் இருந்து அழைப்பு வந்தது. தனது சகோதரனின் மரணம் தெரியாத ரால்பிரட் பெற்றோரை அழைத்தார். ஜியோஃப்ரெட்டைப் பற்றி கேட்டபோது, அவரது சகோதரரை அவசரமாக டெல்லியில் உள்ள மருத்துவமனைக்கு மாற்ற வேண்டும் என்று பெற்றோர் ரால்பிரெடிடம் பொய் சொன்னார்கள்.
எனினும், ரால்பிரெட் அதை ஏற்கவில்லை என்றும், அவர்கள் பொய் சொல்வதாக தந்தையிடம் கூறினார். விரைவில், ரால்பிரட் அதே கொடிய கொரோனாவால் உயிரிழந்தார்.
இரட்டை சகோதர்கள் ஒன்றன் பின் ஒன்றாக உயிரிழந்தது மீரட்டில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



