கொரோனா வைரஸ் தொற்று நிலைமையை அரசாங்கம் சரியாக நிர்வகிக்க தவறியதால் நாடு ஸ்தம்பிதமடைந்துள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா குற்றம்சாட்டியுள்ளார்.
முறையான தடுப்பூசி திட்டம் இல்லாததால் பலர் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியின் இரண்டாவது டோஸை 600,000 பேர் இன்னும் பெறவில்லை என்று கூறுகின்றனர். பெரும்பான்மையான மக்களுக்கு இன்னும் தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்படவில்லை.
காய்கறிகள், பழங்களின் விலைகள் அதிகரித்துள்ள நிலையில் அரசாங்கம் வாழ்க்கை செலவையும் அதிகரித்துள்ளது.
ஆனால் அரச தரப்பினர் வெறுமனே ஊடகங்களின் முன்னால் வந்து விவசாயிகளின் அவலங்கள் என பொய்களை கூறிக்கொண்டிருக்கிறார்கள் என குற்றம்சாட்டியுள்ளார்.




