யாழில் கொரோனா என அடித்துச் சொன்னவர்; நம்ப மறுத்த வைத்தியர்கள்: குடும்பத்திற்கே தொற்று!

Date:

நயினாதீவு ஆலய பணியாளரின் குடும்பத்தில் மேலும் 4 பேர் கொரோனா தொற்றிற்கு இலக்காகியுள்ளனர்.

நேற்று இரவு வெளியான பிசிஆர் முடிவின்படி, அவர்களிற்கு தொற்று உறுதியானது.

நயினாதீவு நாகபூசணியம்மன் ஆலய பணியாளர் ஒருவர் சில தினங்களிற்கு முன்னர் கொரோனா தொற்றிற்கு ஆளானார்.

அவரிற்கு அறிகுறிகள் தென்பட்டதையடுத்து பிரதேச வைத்தியசாலையொன்றிற்கு பிசிஆர் பரிசோதனைக்கு சென்றிருந்தார். எனினும், அவரிற்கு தொற்று வாய்ப்பில்லையென கூறி வைத்தியசாலையில் பிசிஆர் சோதனை நடத்தப்படவில்லை.

மீண்டும் அறிகுறிகள் தென்பட்டதையடுத்து இரண்டாவது முறையும் பரிசோதனை நடத்தப்பட்டிருக்கவில்லை. அவரிடம் தொற்றிற்கான அறிகுறி தென்படவில்லையென வைத்தியசாலையில் கூறப்பட்டிருந்தது.

அடுத்த சில நாட்களில் அவருக்கு சுவாசிக்க சிரமம் ஏற்பட்டு, நள்ளிரவில் பிறிதொரு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் சோதனையில தொற்று உறுதியானது.

அவரது குடும்பத்தினருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் சோதனையில் மனைவி, பிள்ளைகள் என குடும்பத்தில் மேலும் 4 பேருக்கு தொற்று உறுதியானது.

கொரோனா அபாயம் ஏற்பட்ட பின்னரும் வெளியிடங்களிலிருந்து நயினாதீவிற்கு வருபவர்கள் கட்டுப்படுத்தப்படவில்லை. கொரோனா அபாயமிக்க தெற்கு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் வந்து சென்றனர். எனினும், வடக்கு சுகாதார திணைக்களம் அதை கண்டு கொள்ளவில்லை.

ஏனைய சில தீவுப்பகுதிகளில் வெளியார் நுழைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. எனினும், நயினாதீவு திறந்து விடப்பட்டதால் அபாய நிலை உருவாகியுள்ளது.

தொற்றிற்குள்ளானவர்கள் படகு பயணம் உள்ளிட்ட பொது போக்குவரத்தையே பயன்படுத்தி வந்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

சமூக ஊடகங்களில் பெண்ணின் அந்தரங்க படங்களை பரப்பியவர் கைது!

சமூக ஊடகங்களில் ஒரு பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களைப் பரப்பியதற்காக, கினிகத்ஹேன பகுதியில்...

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கைது!

முன்னாள் அமைச்சரான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சற்றுமுன்னர் இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு...

கொள்ளுப்பிட்டி துப்பாக்கிச்சூட்டில் இருவர் காயம்!

கொள்ளுப்பிட்டி, 6வது தெருவில் அமைந்துள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில் இன்று (04)...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்