சஹ்ரான் ஹாஷிமுடன் தொடர்பிலிருந்த குற்றச்சாட்டில் திருகோணமலை, மூதூரில் ஒருவர் பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
மூதூரில் க.பொ.த உயர்தர மாணவர்களிற்கு தீவிரவாத சொற்பொழிவுகள் மேற்பட்டதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
மூதூர், இக்பால் வீதியை சேர்ந்த 38 வயதான ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக கேகாலை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 27 வயது இளைஞரும் மேலதிக விசாரணைக்கு பயங்கரவாத புலனாய்வு பிரிவினால் பொறுப்பேற்கப்பட்டார்.
கம்பளையை சேர்ந்த சந்தேகநபர், நீதிமன்ற உத்தரவின் பேரில் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.




