RDA என பெயரிடப்பட்ட பிக்கப் ரக வாகனத்தில் கஞ்சா கடத்திய சாரதி உட்பட நால்வர் கைது!

Date:

மட்டக்களப்பில் வீதி அபிவிருத்தி பணியில் ஈடுபட்டுவரும் ஒப்பந்தகாரர் கம்பனி ஒன்றிற்கு சொந்தமான வீதி அதிகாரசபை பெயரிடப்பட்ட பிக்கப் ரக வாகனத்தில் கஞ்சா கடத்திய சாரதி உட்பட கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்ட 4 பேரை இன்று (11) மாலை கைது செய்துள்ளனர்.

அவர்களிடமிருந்து கேரளா கஞ்சா மற்றும் பிக்கப் ரக வாகனம் ஒன்றையும் மோட்டார் சைக்கிள் ஒன்றையும் மீட்டுள்ளதாக மாவட்ட குற்ற விசாரணைப் பதிவு பொறுப்பதிகாரி பி,கே பண்டார தெரிவித்தார்.

இன்று மாலை மட்டக்களப்பு திருப்பொருந்துறை பகுதியில் சுற்றிவளைத்து சோதனையிட்டபோது 155 கிராம் கேரள கஞ்சாவுடன் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கல்லடி மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்ட ஒருவரை கைது செய்ததுடன் அவரிடத்தில் இருந்து 3,100 மில்லிக் கிராம் கேரளா கஞ்சாவை மீட்டதுடன் கல்லடி திருச்செந்தூர் பகுதியில் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்ட ஒருவரை கைது செய்ததுடன் அவரிடமிருந்து 73 கிராம் கஞ்சாவை மீட்டனர்.

அதேவேளை மட்டக்களப்பு திருகோணமலை வீதி வைச்சந்தியில் மோட்டர் சைக்கிள் ஒன்றில் கஞ்சாவை எடுத்து வந்த ஊறணியை சேர்ந்த ஒருவரிடம் இருந்து 3,220 மில்லிக்கிராம் கேரளாக கஞ்சாவை மீட்டுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

கிளிநொச்சி விபத்தில் இளைஞன் பலி

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உருத்திரபுரம் D7 பகுதியில் இன்று 03.09.2026 மதியம்...

சுகாதாரப் பரிசோதனை என்ற போர்வையில் மாணவர்களுக்கு பாலியல் தொல்லை? 51 வயது அதிகாரி கைது

கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட பிரபல பாடசாலையொன்றில் 20-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளிடம்...

தமிழ் மொழியில் தேசிய முதலிடம்! 188 புள்ளிகளுடன் யாழ் மாணவன் சபின் சாதனை

புலமைப் பரிசில் பரீட்சையில் தமிழ் மொழி மூலம் தேசிய முதலிடம் –...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்