4 மாவட்டங்களின் 6 கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களின் விபரங்கள்-
மாத்தறை மாவட்டத்தின் மாத்தறை பொலிஸ் பிரிவில்- உயன்வத்த 417 G, உயன்வத்த வடக்கு 417 D ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
கண்டி மாவட்டத்தின் கடுகண்ணாவ பொலிஸ் பிரிவில்- வலகம்பாய கிராம சேவகர் பிரிவில் திப்புட்ட, கொஸ்கஸ்தன்ன பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
மாத்தளை மாவட்டத்தின் ரத்தோட்டை பொலிஸ் பிரிவில்- உடஹவிட்ட ஆகிய கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
புத்தளம் மாவட்டத்தின் கொஸ்வத்த பொலிஸ் பிரிவில்- மெதகிரிமெட்டியான கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை,குருணாகல் மாவட்டத்தின் கும்புக்கெட்டே பொலிஸ் பிரிவில்- நிகதலுபொத கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.