அனலைதீவு, எழுவைதீவுகளிற்கு அத்தியாவசிய சேவை வழங்குநர் தவிர்ந்த வெளியாருக்கான பிரயாணத் தடை ஊர்காவற்றுறை கொரோனா தடுப்புச் செயலணியால் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனா நோயாளிகள் இல்லாத இப் பிரதேசத்தில் நோய் பரவலை தடுக்கவும் நோய் ஏற்படின் நோயாளியை பிரதான நிலப்பிரப்பிற்கு இடம் மாற்றலில் உள்ள இடர்பாடுகளை கருத்திற் கொண்டுமே இந்த நடைமுறை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதையும் அனைவரும் புரிந்து கொண்டு களநிலை உத்தியோகத்தர்களிற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு மேற்படி ஊர்காவற்றுறை சுகாதார பிரிவின் வழிகாட்டலுடன்
இயங்கும் மேற்படி செயலணி கேட்டு கொண்டுள்ளது.
எழுவைதீவில் இவ்வாரம் நடைபெறவிருந்த மருத்துவ முகாமும் பிற்போடப்பட்டுள்ளது.
உரிய அனுமதியின்றி வெளிமாவட்ட நீர் வழங்கல் விநியோக திணைகளத்தின் ஊழியர்களும் படகோட்டியும் அனலைதீவில் தனிமைப்படுத்தப்பட்டனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1