தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவகத்தின் சேவைகள் இன்று (10) முதல் மறு அறிவிப்பு வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன.
நிறுவகத்தின் தலைவர் சவீந்திர கமகே, நாட்டின் கொரோனா வைரஸ் நிலைமை காரணமாக இந்த முடிவு எட்டப்பட்டதாக தெரிவித்தார்.
அதன்படி நாடு முழுவதும் உள்ள பிரதான அலுவலகம் மற்றும் கிளை அலுவலகங்கள் தற்காலிகமாக மூடப்படுகின்றன.
சேவைகளை பெற முன்பதிவு செய்தவர்களுக்கு எதிர்காலத்தில் புதிய திகதிகளுக்கான வழிமுறைகள் வழங்கப்படும்.




