கினியாவின் வடகிழக்கு சிகுரி பிராந்தியத்தில் தங்க சுரங்கம்இடிந்த விழுந்ததில் குறைந்தது 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
நேற்று சனிக்கிழமை இந்த விபத்து நேர்ந்தது.
டாடாகௌரூ கிராமத்திற்கு அருகே அமைந்துள்ள தங்க சுரங்கத்தின் நுழைவாயிலின் மீது பிரமாண்ட பாறை இடிந்து விழுந்தது. உயரிழந்தர்கள் மீது பாறை விழுந்ததா அல்லது தங்க சுரங்க நுழைவாயிலில் சிக்கி இறந்தார்களா என்பதை இன்னும் தெளிவாக தெரிவிக்க முடியவில்லை.
அந்த பகுதியிலுள்ள செஞ்சிலுவை சங்க அதிகாரியொருவர், தங்கச்சுரங்கத்தில் 15 பேர் உயிரிழந்ததையும், பலர் சுரங்கத்திற்குள் சிக்கியுள்ளதையும் உறுதி செய்தார்.
“சிகுரி சுரங்கங்களில் இந்த நிலைமை நம் அனைவரையும் கவலையடையச் செய்கிறது – நாள் முடிவில் இந்த நிலச்சரிவுகள் கோவிட் -19 தொற்றுநோயைக் காட்டிலும் மிகவும் ஆபத்தானவை” என்று சம்பவ இடத்திற்கு வந்த பின்னர் பொலிஸ் தலைவரான மமடூ நயாரே கூறினார்.
கினியாவில் கோவிட் -19 இறப்பு எண்ணிக்கை சனிக்கிழமை வரை 149 ஆக இருந்தது. ஆனால் சமீபத்திய ஆண்டுகளில் தங்க சுரங்கங்களில் விபத்துக்கள் அதிகரித்துள்ளன, குறிப்பாக மாலியின் எல்லைக்கு அருகிலுள்ள சிகுவிரியைச் சுற்றி, 20,000 க்கும் மேற்பட்ட சுரங்கங்கள் அதிகாரப்பூர்வமாக செயல்பட்டு வருகின்றன.
பெப்ரவரி 2019 இல் ஏற்பட்ட நிலச்சரிவில் குறைந்தது 17 சுரங்கத் தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். ஒன்பது மாதங்களுக்குப் பிறகு மற்றொரு விபத்தில் 12 பேர் கொல்லப்பட்டனர்.
வைரங்கள் மற்றும் தங்கம் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ள போதும், கினியாவின் மக்கள் தொகையில் பெரும்பகுதி தினசரி போராட்டத்தை எதிர்கொள்கின்றனர். வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழ்கின்றனர்.
இந்த பகுதி தங்கச் சுரங்களை நோக்கி மாலி, செனகல் மற்றும் பல மேற்கு ஆபிரிக்க அண்டை நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் படையெடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.




