வடக்கின் இன்றைய கொரோனா தொற்றாளர்கள் விபரம்!

Date:

வடமாகாணத்தில் இன்று 25 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

இன்று (8) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் ஆய்வுகூடத்தில் 460 பேரின் பிசிஆர் மாதிரிகள் சோதனையிடப்பட்டன.

இதில் யாழ் மாவட்டத்தில் 14 பேர், வவுனியா மாவட்டத்தில் 7 பேர், கிளிநொச்சி மாவட்டத்தில் 3 பேர், மன்னார் மாவட்டத்தில் ஒருவரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

யாழ் மாவட்டத்தில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்த 5 பேர், வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்ற 2 பேர், யாழ்ப்பாணம் சிறைச்சாலை 5 பேர், தெல்லிப்பளை வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியிலிருந்த ஒருவர், ஊர்காவற்துறை வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் அனுமதிக்கப்பட்ட ஒருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டார்.

கிளிநொச்சி மாவட்டத்தில், கிளி பொது வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவில் 2 பேர், பளை வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்ற ஒருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

வவுனியா மாவட்டத்தில், குருக்கள்குளம் பகுதியில் தொற்றாளருடன் நேரடி தொடர்பிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டிருந்த 5 பேர், வவுனியா வைத்தியசாலையின் தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட 2 பேர் தொற்றிற்குள்ளாகினர்.

மன்னார் பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற ஒருவர் தொற்றிற்குள்ளாகினர்.

spot_imgspot_img

More like this
Related

காரைதீவில் யானைகளின் நடமாட்டத்தால் மக்கள் அச்சம் – மனித–யானை மோதலைத் தடுக்க வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்

காரைதீவு பிரதேசத்தின் பல பகுதிகளில் அண்மைக்காலமாக யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில்,...

அரசுக்கு எதிராக 12ஆம் திகதி அடையாள உண்ணாவிரதம்: ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு

அனுர குமார திசாநாயக்க ஜனாதிபதியாக ஆட்சி அதிகாரத்திற்கு வந்து இரண்டு வருடங்கள்...

மனைவியின் தங்கையில் கண் வைத்த இராணுவச்சிப்பாய் கைது!

தனது மனைவியின் தங்கையான 15 வயது பாடசாலை மாணவியை வன்புணர்வு செய்த...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்