வவுனியா நகரப்பகுதியில் முககவசம் அணியாமல் சென்ற 30 ற்கும் மேற்பட்டோர் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளனர்.
வவுனியா தலைமை பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரி றொசான் சந்திரசேகர தலைமையிலான குழுவினரால் குறித்த நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது நகரில் முககவசம் அணியாமல் சென்ற30 ற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு வாகனங்களில் ஏற்றிச் செல்லப்பட்டனர்.
குறித்த நபர்களிற்கு எதிராக நீதிமன்றில் வழக்குதாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிசார், சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக கடைப்பிடிக்காதவர்களிற்கு எதிராக கடுமையான நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்று தெரிவித்தனர்




