கொரோனா பிரச்சனையால் வேலை இல்லாமல் இருக்கும் அப்புக்குட்டி; திரையுலகினரிடம் இருந்து உதவி எதிர்பார்ப்பு!

Date:

கொரோனா வைரஸ் பிரச்சனையால் பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் நடிகர் அப்புக்குட்டி செலவுக்கு பணம் இல்லாமல் கஷ்டப்படுவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. திரையுலகினரிடம் இருந்து உதவியை எதிர்பார்க்கிறார் அவர்.

கொரோனா பிரச்சனையால் வேலை இல்லாமல் இருக்கும் அப்புக்குட்டிக்கும் அப்புக்குட்டி
ஈசியான கேள்விகளுக்கு பதில் சொல்லி மிகப்பெரிய பரிசுகளை வெல்லலாம்
சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு விஷால் ஹீரோவாக நடித்த வெண்ணிலா கபடி குழு படம் மூலம் பிரபலமானவர் அப்புக்குட்டி. சுசீந்திரன் இயக்கிய அழகர்சாமியின் குதிரை படத்தில் ஹீரோவாக நடித்தார் அப்புக்குட்டி. அந்த படத்திற்காக அவருக்கு தேசிய விருது கிடைத்தது. அஜித்தின் வீரம், வேதாளம் ஆகிய படங்களிலும் நடித்திருந்தார்.

அவர் நடிப்பில் கடைசியாக வெளியான படம் மாதவனின் மாறா. கொரோனா வைரஸ் பிரச்சனையால் புதுப்பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் இருக்கிறார் அப்புக்குட்டி. இதனால் செலவுக்கு பணம் இல்லாமல் கஷ்டப்படுவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவராம் அப்புக்குட்டி. சென்னை சாலிகிராமத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்திருக்கிறார். பண பிரச்சனை ஏப்படவே புறநகர் பகுதிக்கு மாறிவிட்டாராம். அவர் தற்போது கோவூரில் வசித்து வருகிறார்.

திரையுலகை சேர்ந்தவர்கள் தனக்கு உதவி செய்வார்கள் என்று எதிர்பார்க்கிறார் அப்புக்குட்டி. கொரோனா வைரஸ் பிரச்சனையால் திரையுலகை சேர்ந்த பலர் அன்றாடத் தேவைகளுக்கு கூட பணம் இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள்.

அன்றாடம் உழைத்தால் தான் சாப்பாடு என்று இருக்கும் திரையுலக ஊழியர்கள் தான் அல்லாடிக் கொண்டிருக்கிறார்கள். மேலும் சிறு, சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர்களும் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

அதில் ஒரு சிலர் நிதி பிரச்சனை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்களும் நடந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனாவின் முதல் அலையை விட இரண்டாம் அலை கொடூரமாக இருக்கிறது.

இந்தியாவில் கொரோனா வைரஸால் தினமும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உலக நாடுகளை அஞ்ச வைத்திருக்கிறது. கொரோனாவால் பாதிக்கப்படுவோர் மருத்துவமனைகளில் பெட் கிடைக்காமல், ஆக்சிஜன் சிலிண்டர், மருந்து கிடைக்காமல் கஷ்டப்படுகிறார்கள். அவர்களை காப்பாற்ற உறவினர்கள் உதவி கேட்டு கெஞ்சி, அழுவதை தினமும் பார்க்க முடிகிறது.

spot_imgspot_img

More like this
Related

அரசுக்கு எதிராக 12ஆம் திகதி அடையாள உண்ணாவிரதம்: ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு

அனுர குமார திசாநாயக்க ஜனாதிபதியாக ஆட்சி அதிகாரத்திற்கு வந்து இரண்டு வருடங்கள்...

மனைவியின் தங்கையில் கண் வைத்த இராணுவச்சிப்பாய் கைது!

தனது மனைவியின் தங்கையான 15 வயது பாடசாலை மாணவியை வன்புணர்வு செய்த...

வெளிநாட்டுக்கு தப்பியோடிய நீதிமன்ற உத்தியோகத்தர்

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான சலிந்து மல்சித...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்