பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்வதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்ய எவ்வித சட்ட ரீதியான தடைகளும் இல்லை என சட்டமா அதிபர், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அறிவித்துள்ளார்.
குற்றப்பலனாய்வுத்துறை பொறுப்பதிகாரி எழுத்துமூலம் விடுத்த கோரிக்கைக்கு, சட்டமா அதிபர் இந்த தெளிவுபடுத்தலை வழங்கியுள்ளார்.
சட்டமா அதிபரின் இணைப்பதிகாரி அரச சட்டவாதி நிஷார ஜெயரத்ன இதனை தெரிவித்தார்.




