தம்பதியினர் உட்பட ஒரே வீட்டில் 3 பேர் கொரோனாவிற்கு பலி!

Date:

கொரோனா தொற்றினால் ஒரே லீட்டில் வசிக்கும் 3 பேர் உயிரிழந்தனர்.

மாலபே, கோணவத்தை பகுதியில் வசித்து வந்த இவர்கள் தொற்று உறுதியான பின்னர், ஐ.டி.எச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளனர்.

94, 86 வயது தம்பதியினரும், அவர்களில் வீட்டில் வசித்து வந்த உறவினரான 82 வயதான பெண்ணும் உயிரிழந்துள்ளார்.

கடுவெல நகரசபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவரும், அவரது மனைவியான ஓய்வுபெற்ற தாதியுமே உயிரிழந்துள்ளனர்.

தம்பதியினரின் மகளின் கணவரின் தாயாரே உயிரிழந்த மற்றைய பெண்மணி.

உயிரிழந்த தம்பதியினரின் மகள், கணவர், பிள்ளைகள் கொரோனா தொற்றிற்குள்ளாகி முல்லேரியா ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பலியான 3 பேரும் கடந்த ஏப்ரல் 22ஆம் திகதி ஐடிஎச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மூவரும் 3ஆம் திகதி உயிரிழந்தனர். அவர்களின் சடலங்கள் ஒரே நேரத்தில் முல்லேரியாவில் தகனம் செய்யப்பட்டன.

spot_imgspot_img

More like this
Related

‘திருடினால் சிறைதான்’: ஜேவிபி செயலாளர்!

பொது நிதியைத் தவறாகப் பயன்படுத்திய குற்றவாளிகள், அவர்களின் அரசியல் சார்பு அல்லது...

இலங்கையை விட்டு எஸ்கேப் ஆன முன்னாள் அமைச்சர் சொக்கமல்லி

முன்னாள் பிரதி அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர என்ற சொக்க மல்லி நாட்டை...

போதை பொருள் வியாபாரியிடம் பணம் அவரது மனைவியை பாலியல் இலஞ்சம் கோரிய கல்குடா பொலிஸ் நிலைய பொலிஸ் உப பரிசோதகர் (SI) பணிநீக்கம்

திருகோணமலையில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் வியாபாரி ஒருவரை விடுதலை செய்வதற்கு இலஞ்சமாக...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்