27.6 C
Jaffna
March 28, 2024
இந்தியா

கட்டுக்கடங்காத கொரோனா மரணங்கள்: மயானத்தில் ‘ஹவுஸ் புல்’ அறிவிப்பு!

இந்தியாவில் கொரோனா மரணங்கள் கட்டுக்கடங்காமல் அதிகரித்து செல்லும் நிலையில், இடுகாடு ஒன்றில் ‘ஹவுஸ் புல்’ அறிவிப்பு மாட்டப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கர்நாடகாவின் சாம்ராஜ்பேட்டையில் உள்ள ஒரு தகன மைதானத்தில் ஒரே நேரத்தில் 20 கொரோனா நோயாளிகளின் உடல்கள் எரியூட்டப்படுகின்றன. தொடர்ச்சியாக உயிரிழப்புகள் ஏற்படுவதால் அருகில் உள்ள மருத்துவமனைகளில் இருந்து எடுத்து செல்லப்படும் உடல்கள் இந்த மயானத்துக்கு கொண்டு வரப்படுகின்றன.

ஏற்கனவே 20 உடல்கள் எரிமேடையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் சில உடல்கள் மையானதுக்கு வெளியே நீண்ட நேரம் காத்துக்கொண்டிருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்க மையானதுக்கு வெளியே ‘ஹவுஸ் ஃபுல்’ பலகையை மாட்டியுள்ளனர்.

பெங்களூருவில் மொத்தம் 13 மின் தகன மேடைகள் உள்ளன. அவைகள் முழுவதும் கொரோனா நோயாளிகளின் உயிரிழப்புகளால் பரபரப்பாக இயங்குகின்றன. இந்நிலையில், தகனத்தின் சுமையை குறைக்க பெங்களூரைச் சுற்றியுள்ள 230 ஏக்கர்களை கர்நாடக அரசு ”புருஹத் பெங்களூரு மகாநகர பலிகே” (பிபிஎம்பி) க்கு ஒதுக்கியுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

“எம்பி சீட்டுக்காக கணேசமூர்த்தி தற்கொலை என்பதில் துளியும் உண்மையில்லை” – வைகோ

Pagetamil

ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தில் ரூ.1.5 கோடியை இழந்த கணவர்: கடன் கொடுத்தவர்கள் நெருக்கடியால் மனைவி தற்கொலை

Pagetamil

மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுப்பு

Pagetamil

முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஒரு வாரத்தில் இலங்கை அனுப்பப்படுவர்: தமிழக அரசு

Pagetamil

சிறையிலிருந்தபடி ஆட்சி புரியும் கேஜ்ரிவால்

Pagetamil

Leave a Comment