இலங்கை உள்ளிட்ட ஐந்து நான்கு ஆசிய நாடுகளில் வசிக்கும் சவுதி குடிமக்களை விரைவில் நாடு திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
அந்த செய்திகளின்படி,
அடுத்த மாதம் சர்வதேச விமான சேவைகளை மீண்டும் தொடங்க சவுதி முடிவு செய்தாலும் இந்த நாடுகளில் இருந்து எந்த விமான சேவைகளும் இடம்பெறாது என்பதால் சவுதி குடிமக்களை நாடு திரும்புமாறு கூறப்பட்டுள்ளது.
இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் வசிக்கும் சவுதி பிரஜைகளிற்கே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளத.
இந்த நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்ததை தொடர்ந்ர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு சிவில் விமானசேவைகள் அதிகாரசபை வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




