நாடாளுமன்ற செயற்பாட்டில் கடைசி 10 இடங்களிலுள்ளவர்கள்: சம்பந்தன், பிள்ளையான், திலீபன் தமிழ் உறுப்பினர்கள்!

Date:

தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்களில், நாடாளுமன்றத்தில் மிகக் குறைவான செயல்திறனை வெளிப்படுத்தும் பத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நாடாளுமன்றத்தின் உத்தியோகபூர்வ இணையமான Manthri.lk நடத்திய ஆய்வில் இது தெரிய வந்துள்ளது

இலங்கை பொதுஜன பெரமுனவை சேர்ந்த ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்களும், ஐக்கிய மக்கள் சக்தியின் 2 நாடாளமன்ற உறுப்பினர்களும், இலங்கை தமிழ் அரசு கட்சி, ஈழமக்கள் ஜனநாயக கட்சி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி ஆகியவற்றின் தலா ஒவ்வொரு எம்.பிக்களும் “நாடாளுமன்றத்தில் செயல்படாத“ உறுப்பினர்களாக பட்டியலிடப்பட்டுள்ளனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்), ஈ.பி.டிபியின் கு.திலீபன், பொதுஜன பெரமுனவின் கருணாதாச கொடித்துவக்கு, நிபுண ரணவக்க, மர்ஜன் ஃபலீல், ஜனக பண்டார தென்னக்கோன், டிரான் அலெஸ் ஆகியோரும், ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.எஸ். தௌஃபீக் மற்றும் அலி சப்ரி ரஹீம் ஆகியோருமே நாடாளுமன்ற செயற்பாட்டில் கடைசி இடங்களை பிடித்துள்ளனர்.

நாடாளுமன்ற வரவு, உரையாற்றுவது, விவாதங்களில் கலந்து கொள்வதன் அடிப்படையில் உறுப்பினர்களின் செயற்பாட்டு தரம் தீர்மானிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

 

spot_imgspot_img

More like this
Related

நகுலேஸ்வரத்தில் வௌ்ளி திருட்டு – இருவர் கைது

இலங்கையின் பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றான யாழ்ப்பாணம் கீரிமலை - நகுலேஸ்வர சிவ...

காமெனியின் இறுதிச் சடங்குகள் வாரம் தொடங்கியது; தெஹ்ரானில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது!

அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய குண்டுவீச்சுகளால் கொல்லப்பட்ட ஈரானின் மறைந்த உச்சத் தலைவர்...

பணப்பரிமாற்றம் நடந்தபோது விஜயதாச ராஜபக்ஷவும் டுபாயிலிருந்தார்!

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு, கூறப்படும் இலஞ்சம் பெறப்பட்ட...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்