அதிரடிப்படை சூடு… நிறுத்தாமல் தப்பியோடிய கன்டர் வாகனம்: முள்ளியில் நடந்தது என்ன?

Date:

சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்டு வந்தவர்கள் மீது விசேட அதிரடிப்படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இருவர் காயமடைந்துள்ளனர்.

பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முள்ளி பகுதியில் இன்று (16) அதிகாலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கடந்த வாரம் இதேபகுதியில் சட்டவிரோத மணல் கடத்தல்காரர்களை வழிமறித்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை மோதித்தள்ளி விட்டு, கடத்தல்காரர்கள் தப்பிச் சென்றனர்.

இதையடுத்து, இன்று விசேட அதிரடிப்படையினர் களமிறக்கப்பட்டு, பாதையில் முள் தடைகள் இடப்பட்டு, கடத்தல்காரர்கள் வழிமறிக்கப்பட்டனர்.

மகேந்திரா கன்டர் வாகனத்தில் மணலுடன் வந்த கடத்தல்காரர்கள் வாகனத்தை நிறுத்தாமல் தப்பிச் செல்ல முயற்சித்த போது, அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. வாகனத்தில் மேல் பகுதியில் இருந்த இருவர் காயமடைந்தனர்.

எனினும், கன்டர் நிறுத்தாமல் தப்பிச் சென்று விட்டது.

சற்று நேரத்தில் வயிறு, காலில் காயமடைந்த காயமடைந்த இருவரும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் 30, 31 வயதுடையவர்கள்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

பால் தேநீரின் விலை அதிகரிப்பு

நேற்று (20) நள்ளிரவு முதல் பால் தேநீரின் விலையை 5 ரூபாவினால்...

நீதிமன்றத்தில் அம்பலமாகும் உயிர்த்த ஞாயிறு சதித்திட்டம்: கோட்டாவின் கூலிப்படையாக செயற்பட்ட பிள்ளையான் குழு!

2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் குறித்த நீதிமன்ற...

மயிலத்தமடு மேய்ச்சல் தரைக்கு காணியை விடுவிக்க பணிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் நீண்டகால பிரச்சினையாக இருந்துவரும் மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரைக்காக,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்