பாம் எண்ணெய் இறக்குமதி தடைக்கு பேக்கரி உரிமையாளர்கள் எதிர்ப்பு!

Date:

பாம் எண்ணெய் இறக்குமதியை நிறுத்த அரசாங்கம் எடுத்த முடிவு பேக்கரி துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பேக்கரி உரிமையாளர்கள் கூறுகின்றனர்.

அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜெயவர்தன, மார்ஜரினின் கட்டாய மூலப்பொருள் பாம் எண்ணெய் ஆகும். இது தொடர்பாக நேற்று அரசாங்கம் எடுத்த முடிவை அனைத்து பேக்கரி உரிமையாளர்களும் கண்டித்துள்ளனர் என்று கூறினார்.

மார்ஜரினில் உள்ள 75% பொருட்களில் பாம் எண்ணெய் உள்ளது என்றும், பேக்கரி தயாரிப்புகளில் சீனி, மாவு, முட்டை மற்றும் மார்ஜரின் முக்கிய பொருட்கள் என்றும் ஜெயவர்தன கூறினார்.

பாம் எண்ணெய் மீதான தடையை மஞ்சள் இறக்குமதி செய்வதற்கான தடையுடன் ஒப்பிட முடியாது என்று என்.கே.ஜெயவர்தன கூறினார். பாம் எண்ணெய் மீதான தடை நீண்ட கால அடைப்படையில் சாதகமானது. எனினும், இது படிப்படியாக அறிமுகப்படுத்தப்பட வேண்டும். பேக்கரி உரிமையாளர்களின் தேவை பூர்த்தி செய்யப்படுவதை அதிகாரிகள் உறுதி செய்திருக்க வேண்டும் என்றும் பின்னர் பொருத்தமான முடிவை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

பேக்கரி உரிமையாளர்கள் வீதிகளில் இறங்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார், பேக்கரி தயாரிப்புகளிற்கு உள்நாட்டில் தயாரிக்கப்படும் தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்த முடியாது என்றார்.

spot_imgspot_img

More like this
Related

மலேசியாவில் கட்டாய தொழிலாளியாக வைக்கப்பட்டிருந்த பெண் மீட்பு: 7 இலங்கையர்கள் கைது!

சக இலங்கையர் ஒருவரைக் கட்டாயத் தொழிலாளியாகச் சுரண்டியதாகச் சந்தேகிக்கப்படும் இலங்கையர் ஒருவரை...

கபில சந்திரசேன மரண விசாரணையில் நீதிபதி அதிருப்தி

மர்மமான முறையில் மரணமடைந்தவரும், ஏர்பஸ் ஒப்பந்தத்தில் பிரதான சந்தேக நபருமான ஸ்ரீலங்கன்...

மோகினி அருவியில் முச்சக்கரவண்டி கவிழ்ந்ததில் 2 பேர் பலி

முல்கமவிலிருந்து லக்ஷபான நோக்கிச் சென்றுகொண்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்று, ஓட்டுநர் கட்டுப்பாட்டை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்