29.8 C
Jaffna
March 29, 2024
குற்றம்

17 வயது சிறுமி, 34 வயது இளைஞனின் காதலிற்கு உதவியதால் 19 வயது யுவதி குத்திக்கொலை!

பராயமடையாத தனது மகளின் விபரீத காதலிற்கு துணையாக இருந்தார் என 19 வயதான யுவதியை, சிறுமியின் தந்தை குத்திக் கொன்றுள்ளார்.

இந்த அதிர்ச்சி சம்பவம் கலேவெல, பட்டிவெல பகுதியில் நடந்தது. ஏ.பி.ரஷ்மிகா தில்மினி என்பவரே உயிரிழந்தார்.

17 வயதான தனது மகள், 34 வயதான இளைஞனுடன் திருமணம் புரிவதற்கு ஒத்தாசையாக இருந்தார் என கூறியே, இந்த கொலை நடந்தது. 17 வயது சிறுமி தனது வீட்டை விட்டு வெளியேறி, உயிரிழந்த யுவதியின் வீட்டில் தங்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 3ஆம் திகதி, தான் பணியாற்றும் புத்தக கடையில் யுவதி நின்ற போது, 17 வயது சிறுமியின் தந்தை அங்கு வந்து யுவதியை கத்தியால் குத்தியுள்ளார்.

படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட யுவதி உயிரிழந்தார்.

இந்த கொலையை புரிந்த 42 வயதானவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
2

இதையும் படியுங்கள்

விபச்சார விடுதியில் சிக்கிய 2 பெண்களுக்கு எயிட்ஸ்!

Pagetamil

மனைவியின் 15 வயது தங்கையுடன் குடும்பம் நடத்தி கர்ப்பமாக்கியவர் கைது!

Pagetamil

காதலன் பலியான 15வது நாளில் உயிர்விட்ட காதலி: உடல் பாகங்கள் தானம்!

Pagetamil

பேஸ்புக்கை ஹக் செய்து யுவதியின் நிர்வாண படம் கேட்டு மிரட்டிய இளைஞன்: சொக்லேற் வாங்கி வந்தபோது சிக்கினார்!

Pagetamil

2வது முறை சிக்கிய 19, 21 வயது யுவதிகளுக்கு விளக்கமறியல்

Pagetamil

Leave a Comment