பராயமடையாத தனது மகளின் விபரீத காதலிற்கு துணையாக இருந்தார் என 19 வயதான யுவதியை, சிறுமியின் தந்தை குத்திக் கொன்றுள்ளார்.
இந்த அதிர்ச்சி சம்பவம் கலேவெல, பட்டிவெல பகுதியில் நடந்தது. ஏ.பி.ரஷ்மிகா தில்மினி என்பவரே உயிரிழந்தார்.
17 வயதான தனது மகள், 34 வயதான இளைஞனுடன் திருமணம் புரிவதற்கு ஒத்தாசையாக இருந்தார் என கூறியே, இந்த கொலை நடந்தது. 17 வயது சிறுமி தனது வீட்டை விட்டு வெளியேறி, உயிரிழந்த யுவதியின் வீட்டில் தங்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 3ஆம் திகதி, தான் பணியாற்றும் புத்தக கடையில் யுவதி நின்ற போது, 17 வயது சிறுமியின் தந்தை அங்கு வந்து யுவதியை கத்தியால் குத்தியுள்ளார்.
படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட யுவதி உயிரிழந்தார்.
இந்த கொலையை புரிந்த 42 வயதானவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
What’s your Reaction?
+1
+1
1
+1
+1
+1
+1
+1
2