சாவகச்சேரி அல்லாரை பகுதியில் நேற்று இடம்பெற்ற வாள்வெட்டில் ஒருவர் காயமடைந்து, சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மீசாலை கிழக்கை சேர்ந்த 40 வயதான ஒருவரே காயமடைந்துள்ளார்.
கொடுத்த கடனை திருப்பிக் கேட்ட போது இந்த விபரீதம் நிகழ்ந்துள்ளது.
தலை, கை, தொடை பகுதிகளில் பாரிய வெட்டுக்காயங்களுடன் அவர் நேற்று இரவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



