மாணவியை துஷ்பிரயோகதிற்கு உட்படுத்தியோர் கைது

Date:

அனுராதபுர சிறுவர் காப்பகத்தில் மாணவியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய முன்னாள் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அனுராதபுரத்தில் உள்ள சிறுவர் காப்பகமொன்றில் 17 வயது மாணவியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்கள் 49 வயதுடைய முன்னாள் நன்னடத்தை மற்றும் சிறுவர் திணைக்கள பராமரிப்பு ஆணையாளர், 57 வயதான சிரேஷ்ட நன்னடத்தை அதிகாரி என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

காவல்துறை ஊடகப் பிரிவின் தகவலின்படி, இது தொடர்பான மேலதிக விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக மேலதிக தகவல்களை அறிந்து கொள்ளும் நோக்கில், காவல்துறையினர் மாணவி மற்றும் காப்பக அதிகாரிகளிடம் வாக்குமூலங்களை பதிவு செய்து வருகின்றனர்.

விசாரணைகள் முடிந்ததும், கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

னோஜனின் குடும்பத்திற்கு ரிஷாட் பதியுதீன் நேரில் ஆறுதல்: விடுதலைக்காகத் தீவிர முயற்சி

சவூதி அரேபியாவில் தண்டனை விதிக்கப்பட்டுத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள கல்முனை, நற்பிட்டிமுனையைச்...

சஹ்ரானைக் கண்டதுமில்லை-பேசியதுமில்லை-ரிசாட் பதியுதீன்

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் முக்கிய சூத்திரதாரியான சஹ்ரான் ஹாசிமுடன் தனக்கு...

யாழில். இரண்டு கடலமைகளுடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணம் , சேந்தான்குளம் பகுதியில் இன்றைய தினம் சனிக்கிழமை இரண்டு கடலமைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் சேத்தான்குளம் பகுதியில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்